Archive For The “பொது” Category
மீரட்டுலே நயம் கத்தரிக்கோல் கிடைக்குமாமே? வசந்தி எந்த நிமிஷத்திலும் வெடிக்கக் கூடிய சிரிப்பை உதட்டில் சுமந்தவளாக, கண்ணை இடுக்கிச் சின்னச் சங்கரனைக் கேட்டாள். யார் சொல்றா? உங்க மனுஷா. எதுக்குக் காலங் கார்த்தாலே கத்திரிக்கோலும் கத்தி கபடாவும்? சங்கரன் அவள் பக்கமாக நகர்ந்தபடி கேட்க, அவன் இன்னும் நெருங்காமல் பிடித்துத் தள்ளினாள். உங்க ஊர்ப் பொம்மனாட்டிகள் எல்லாம் மீரட்லே இருந்து சன்னமான கத்தரிக்கோல் வாங்கிண்டு வரச் சொல்லியிருக்காளாம். எதுக்கு? எதுக்கு கத்திரிக்கோல் தேடுவா? மயிர் வெட்டிக்கத்தான். தலைமயிரா?…
முந்தாநாள் (ஞாயிறு) விருட்சம் சந்திப்பு முடியும் நேரத்தில் ஓர் இளைஞர் என்னைக் கேட்டார் – ‘அது ஏன் சார் விஸ்வரூபம் நாவல்லே மகாலிங்கய்யனை ஒரு இடத்திலே ரொம்ப குரூரமானவனா சித்தரிச்சிருக்கீங்க? அவன் காமலோலனா இருக்கட்டும். திடீர்னு இப்படி கொடூரனாவானா என்ன?’ ஆழ்ந்து படித்து, யோசித்துக் கேட்ட கேள்வி அது. அவர் குறிப்பிட்ட இடம் – //பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு…
அம்பலப்புழை குடும்பம் அச்சுதம் கேசவம் நாவல் விரைவாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு அத்தியாயம் வெளியிட்டதும் அது பற்றிய் குறிப்புகளைத் தனியாகத் தொகுத்து அளிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவற்றில் சில தமிழிலும் மற்றவை ஆங்கிலத்திலும் இருக்கும். அத்தியாயங்களும், அவை பற்றிய குறிப்புகளும் இங்கும், என் ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம் பெறுகின்றன. அரசூர் குடும்பம் அத்தியாயம் 24- குறிப்புகள் தில்லியின் குளிர்காலத்தைச் சுருக்கமாகச் சொல்ல வந்தது 8 பக்கம் நீண்டு விட்டது. அச்சுப் பிரதியில் கொஞ்சம் சுருங்கலாம். 1980-களில் நான்…
பகல் ஒரு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது. சின்னச் சங்கரன் பரபரப்பானான். முழு ஆபீஸுமே சாப்பிடத் தொடங்கும் வேளை இது. மூன்றாம் மாடியில் இருந்து முதல் மாடி கேண்டீனுக்குப் போகிற கூட்டம் இங்கே குறைவு. டெஸ்பாட்ச் பிரிவு மேஜையை அவசரமாகச் சுத்தப் படுத்தி, வந்த கடிதாசு, போகிற கடிதம், குண்டூசி, கோந்து பாட்டில், அரக்கு, கெட்டிப் பேப்பரில் சிங்கத் தலை அடித்த, ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாத சர்க்கார் சாணித்தாள் கவர், ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் கீழே…
மூடுபனி காலை முதல் தில்லி முழுவதும் அடர்த்தியாகக் கவிந்திருந்தது. சராசரிக்கும் குறைவான காலை வெளிச்சத்தில் ஆபீஸ் போக பஸ் ஸ்டாப்புக்கு நடக்கிறதும், குழந்தைகளின் பள்ளிக்கூடம் கொண்டு விடும் ரிக்ஷாக்கள் மணியடித்துக் கொண்டு போகிறதும், பெரும்பான்மை வீடுகளில் டபுள் ரொட்டி ஆம்லெட் இருப்புச் சட்டியில் வெங்காயத்தோடு வதங்கும் வாடையும் குளிருமாக அபத்தமான காலைப் பொழுது. நாள் முழுக்க உறங்கி, சாயங்காலம் ஊரோடு விழித்தெழுந்து நாளைத் துவக்குகிறது போல் மூடுபனி ஊரை மாற்றியிருந்தது. தலைநகரத்தில் கலாசார அமைச்சரகம் இன்னமும் செயல்பட…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் இருபத்திரெண்டு இரா.முருகன் வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து —————————– கரண்ட் போச்சு. கரண்ட் போச்சு. எல்லா விதமான குரல்களும் சேர்ந்து ஒலிக்க, பம்மிப் பாய்ந்து கொண்டு இருள் வந்தது. ராத்திரியின் அடையாளத்தை தீர்க்கமாக்கிக் கொண்டு விளக்குகள் அணைந்து போயிருந்த தெரு. வைத்தாஸ் மேலே அடியெடுத்து வைக்க மாட்டாமல் நின்றான். ஹவேலி. வைத்தாஸுக்குச் சட்டென்று நினைவு வந்தது. இவ்வளவு பெரிய வசிப்பிடத்தை வெறுமனே வீடு என்று சொல்வது மரியாதைக் குறைச்சல். ஹவேலி கம்பீரமான…