Archive For The “பொது” Category
ஒரு எழுத்தாளனுக்கு வேறொரு சமகால எழுத்தாளரின் படைப்பைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்த வாசிப்பு பல தளத்திலும் நிகழும். முதலாவது, தன்னையறியாமல், இதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்ற சிந்தனை ஓட்டம் முதல் பக்கத்திலேயே தொடங்கி இருக்கும். அந்தப் படைப்புக்குள் தன் படைப்பை மனதில் எழுதிப் போகும்போது வாசக அனுபவம் பின்னணிக்குப் போய்விடலாம். இன்னொரு தளத்தில், அந்தப் படைப்பு பிரமிக்க வைத்தால் அதற்கு எளிமையான காரணம் கண்டுபிடித்து மனநிறைவு அடைய ஒரு மன ஓட்டம் கூடவே…
Excerpts from my column TALESPIN due for publication in The Wagon Magazine (Literary Monthly) – ‘I fly, therefore I am’ My flying related worries would commence while I am on land, at office coordinates to be precise. A typical cryptic instruction like ‘Proceed forthwith to the Travel Desk’, would be conveyed to me asynchronously on…
குருத்தோலை ஞாயிறன்று எனக்கு நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு கொழுக்கட்டை தின்ன விருப்பமில்லாது போனது.
By Era Murukan |
Getting edited and cross-checked with the original. A small excerpt from the closing chapter பிலாத்தோஸ் பாதிரியார் எங்கள் திருச்சபைக்கு வந்தது முதல், .துக்கவெள்ளிக்கு முந்திய லெண்ட் நோன்புக் காலத்தில் ‘சிலுவைப்பாதை’ சடங்கு அனுசரிக்கப்படத் தொடங்கியது. ஏசுவைச் சிலுவையில் அறைந்து இறந்துபோகத் தீர்ப்பானதில் ஆரம்பித்து, அவருடைய திரு உடலைக் குகையில் பாதுகாத்து வைத்து இறுதிச் சடங்கு செய்வது வரையான நிகழ்வு நடக்கும் பதினான்கு இடங்கள் கற்பிக்கப்பட்டும். போணிபேஸ் பாலத்தை அடுத்துத் தொடங்கி, சர்ச்…
உடுப்பி ஓட்டல் என்று கன்னடக் காரர்களோ உள்ளூர் குப்பன்களோ ஊர் முழுக்க உப்புமா கிண்டிப் போட்டுக் காப்பி கலந்து கொடுத்து காசை வாங்கி வாங்கிக் கல்லாவில் ரொப்பிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது
By Era Murukan |
இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 4 1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ,…
சென்னை தின வாழ்த்துகள்: 22 ஆகஸ்ட் 2017: இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3
By Era Murukan |
இரா.முருகன் – விஸ்வரூபம் நாவலில் சென்னை – 3 1938 அக்டோபர் 7 வெகுதான்ய புரட்டாசி 21 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் தீர்க்கமான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. … … .. .. ஸ்டேஷன் வாசல் பக்கம் ஒருத்தன் கை நிறைய நோட்டீசுகளை வைத்துக் கொண்டு வினியோகித்தபடி இருந்தான். பாகவதர்…
Rushing towards the end… a small excerpt from the translation done today மலாக்கா ஹௌஸில் கட்சி அலுவலகத்துக்கு நான் நீண்ட காலம் கழித்து மறுபடியும் போனபோது, சுவரில் ஸ்டாலின் உருவப்படம் ஒதுங்கி இருந்தது. முதல் முதலாகப் படங்களை மாட்டியபோது மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் ஆகியவர்களின் குழுவில் பிரதானமாக கூர்மையான விழிகளோடு இருந்த ஸ்டாலின் படம் இருந்தது. இப்போது சுவரில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு, ஏ.கே.கோபாலன், பி.சுந்தரையா, பி.கிருஷ்ணபிள்ளை, வயலார் நினைவு மண்டபம் போன்ற படங்கள்…