Archive For The “பொது” Category
“ஒரே நாள்லே ரெண்டு செண்டிமீட்டர் வளர்றது தலைமுடி” என்றார். அவர் கண்கள் பயத்தில் வெறித்து ஒரு வினாடி இருந்து சகஜ நிலைக்குத் திரும்பின. “நல்லது தானே” என்றேன் சமாதானமாக. “நிச்சயமா இல்லே. ஒரு நாளுக்கு ரெண்டு செண்டிமீட்டர். ஒரு வாரத்திலே பந்த்ரெண்டு”. பதினாலு இல்லையோ. ஞாயிற்றுக்கிழமை முடி வளராதோ. ஒரு மாசத்துலே ஐம்பது செண்டிமீட்டர் என்றார் அவர். திரும்ப கணக்கு பிசகு. இருந்தாலும் உண்மை. நிலைமையின் பயங்கரம் எனக்கு அப்போது உறைத்தது. இன்னும் ஒரு மாதம் போனால்…
1975 – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி. “யூனிட் வண்டி வந்தாச்சு” என்றபடி, குமரேசன் கல்லாவை சாவி போட்டு திறந்து இருந்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ”வாங்க, நாம போகலாம், உங்க ஸ்கூட்டர்லே ஒரு அழுத்தல். போயிடாலாம்” என்றார் நிருபர். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கியது. சினிமா படம் எடுக்க ஒரு கோஷ்டி வந்திருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக ராக்கிப்பட்டியில் வற்றிப்போன ஊருணிக் கரையில் ஐயனார் கோவிலை ஒட்டி…
New Novel ‘1975’ -Excerpts – ஷம்மிகபூர் லாஜிக்கே இல்லாமல் பக்கவாட்டில் திரும்பி போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கும் படம்
By Era Murukan |
சில வினாடிகளில் அந்த வளர்ப்புத் தேனிக் கூட்டம் முற்றும் விலகி வெளியே பறக்க, கரண்ட் வந்து விட்டது. நாங்கள் மெல்ல முன்னறைக்கு ஜாக்கிரதையாக நகர்ந்து பார்க்க, அங்கே காந்தி படம், நேரு படம், சுபாஷ் படம், ராஜாஜி படம், அப்புறம் பிரதமர் படம் முழுக்கக் கண்ணுக்குத் தெரியவில்லை. அத்தனை தேனீயும் அவர் முகத்தில் தான். கொஞ்சியதோ, கொட்டியதோ, தெரியாது. “ராணித் தேனி ஒய்வு ஒழிச்சலா வெளியே வந்தா அந்தப் படத்துலே தான் எப்பவும் போய் உட்காரும். கூடவே…
புது நாவல் : டிஸ்ட்ரிக்ட்லேயே நீளமான தலைமுடி. எமர்ஜென்ஸி புள்ளிவிவரத்திலே இதெல்லாம் அடங்குமோ?
By Era Murukan |
“ஏன் பேசவே மாட்டேங்கிறே”, வட்டமேஜை மேல் உட்கார்ந்தபடி கேட்டாள் பாருக்குட்டி. தலைமுடியை நெகிழ வாரி, முழங்கால் வரை தொங்கியதை அவள் சுவாதீனமாக முன்னால் அள்ளிப் போட, என் முகத்தில் மூலிகைத் தைலமும், மரிக்கொழுந்தும் வாடிக் கொண்டிருக்கும் கதம்பமும் நெடியைக் கிளப்பி ஒரு வினாடி கண் இருள நள்ளிரவாக்கி விட்டு அவள் தோளில் அமர்ந்தது. இது அழகு ஆக்கிரமிப்பே தான். திட்டமிட்டு நடத்தப்படுவது. யார் திட்டமோ. காலேஜில் இரண்டு வருடம் பின்னால், என் தங்கையோடு படித்தபோது கண்டுகொள்ளவே மாட்டாள்….
கல்யாணி மட்டும் (இரா.முருகன்) அன்னம்மா வாசலுக்கு வந்தபோது ஏக இரைச்சலாக இருந்தது. குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம். இரண்டு பெரிய தெருக்களின் சந்திப்புக்குப் பின்னால் ஒற்றை வரிசையில் ஓட்டு வீடுகள் நெருங்கியடித்து நிற்கும் முட்டுச் சந்து அது. வாசலை ஒட்டி சாக்கடை ஓடுகிற பிரதேசம். ஓடாமல் அது ரெண்டு நாளாகத் தேங்கி நிற்கிற கஷ்டம் இங்கே யாருக்குமே நினைவில் படுவதில்லை. எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் குழந்தைகள் சாயந்திரம் பந்தெறிந்து அடித்து விளையாடுகிறார்கள். சாக்கடையில் விழுந்த பந்துகளை எந்த…
ஆபீஸில் நுழைந்தபோது, ரத்தினம் எதையோ மறைத்து எடுத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “என்னங்க, கல்லு தோசை கொண்டு வரேன்னு சொன்னீங்களே. அதுவா?” என்று கேட்டேன் அவரை. கல்லுத் தோசையும் கருவாட்டுக் குழம்பும் வீட்டில் விசேஷமான காலைப்பசியாறல் என்பார் அடிக்கடி அவர். “கருவாட்டுக் குழம்பு இல்லீங்க தம்பி, ரவித் தம்பிக்கு ஸ்பெஷல் அய்ட்டம். ஜீவா ஸ்டோர் ராமேசுவரம் பிள்ளை கொடுத்து அனுப்பினார். அவர் தான் மறச்சு கொண்டு போங்கன்னார்”. நான் ரத்தினம் கையில் வைத்திருந்த பத்திரிகையைப் பார்த்தேன். முரசொலி….