Archive For The “பொது” Category
Season 3 of the British royal biopic The Crown is on Netflix now. // From the promo material – Olivia Colman succeeds Claire Foy as Queen Elizabeth II in season three of Netflix’s royal biopic. Following Foy’s Emmy best actress win for her role in the Netflix drama, expectations are high for Oscar winner Colman’s…
வாசகசாலை நண்பர்கள் நாளை மாலை நடத்த ஏற்பாடு செய்திருக்கும் என் ‘நண்டு மரம்’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலுக்கு நண்பர்களை வரவேற்கிறேன். அழைப்பிதழ் இணைத்துள்ளேன். To set the context, அந்தத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து – இது என் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதையிலும் குறுநாவலில் மும்முரமாக இயங்கிய 1990-களுக்கு அப்புறம் நாவலில் கவனம் குவிந்த கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவையெல்லாம். அனேகமாக எல்லாக் கதைகளுமே பத்திரிகைகள் கேட்டு வாங்கிப் பிரசுரித்தவை. இந்தப் பத்திரிகைகளில்…
An excerpt from the stage play ‘Chaavadi’ காட்சி 5 காலம் காலை களம் வெளியே (கொத்தவால் சாவடி) வக்கீல் அய்யங்காரும் அவர் நண்பர் ஹெட் கான்ஸ்டபிள் நாயுடுவும் மெல்ல நடந்து வருகிறார்கள். கட்டி வைத்த வண்டித் தட்டில் காய்கறிப் பையை வைத்து விட்டு அங்கவஸ்திரத்தால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார் அய்யங்கார். நாயுடு வேட்டியை மடித்துக் கட்டியபடி கூட நிற்கிறார். அய்யங்கார்: எத்தனை பேர் அவுட்? இங்கிலீஷ் பத்திரிகையிலே அஞ்சுங்கறான்.. கூட நாலு சைபர்…
இன்று ஐப்பசி மாதம் சஷ்டி. என் தந்தையார் திரு.என்.எஸ்.ராமசாமி ஐயர் 1997-ல் காலமான தினம். என் வாசிப்பையும், எழுத்தையும் ஊக்குவித்த அப்பா நினைவில் கண் கலங்குகிறேன். இந்தக் கதை ‘அம்பி’யில் வரும் அம்பி அவர்தான். 1920-களில் நிகழ்வது இது ’இரா.முருகன் கதைகள்’ பெருந்தொகுப்பில் இருந்து – ————————————————————————————- இரா.முருகன் சிறுகதை : அம்பி அம்பியைக் கடைசியாகத்தான் சேர்த்துக் கொண்டார்கள். மூன்று பேராகப் போக வேண்டாம் என்று சேஷப்பா சொன்னதாலேயே அவனுக்கு வரமுடிந்தது. ‘இதுக்கென்ன மூணும் நாலும் …..
வாதினி தீபாவளி மலரில் வந்திருக்கும் சிறுகதை – ‘மூடல் மஞ்சு’ தியூப்ளே வீதி நாவலில் ஓர் அத்தியாயமாக வைத்திருந்து, மையக் கதையோட்டத்தோடு இசைந்து வரச் சற்று கடினமாக இருந்ததால், இங்கே சிறுகதை ஆனது. மூடல் மஞ்சு இரா.முருகன் மஞ்சுபாஷிணி. அது அவளுடைய சொந்தப் பெயர். மஞ்சுளா. இது வீட்டில் கூப்பிடும் பெயர். நாங்கள் வைத்தது. மஞ்சப் பாப்பா. அலுத்துப்போய் வேறே என்ன மாதிரி வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அஜந்தா தியேட்டருக்கு ஒரு புது மலையாள சினிமா…
1975 நாவலில் இருந்து – 1975 – தில்லி தீபாவளி தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி கரண்ட் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் மும்முரமாகி விடுவார்களாம். அவர்கள் என்றல்ல மொத்த தில்லியுமே பிசியாகி விடும். ஆப்பிள், ஆரஞ்ச் என்று பழக்கடையில் விலைபோகாமல் அடுக்கி இருந்த சரக்கெல்லாம் அரைவிலை, கால்விலையில் கிலோ கணக்காக வாங்கப்பட்டு, பாலீஷ் போட்டுக் கண்ணாடி போல மினுமினுக்க வைக்கப்படும். அடுத்து சோனியான முந்திரிப்பருப்புகள் குவியல் குவியலாக சற்றே வறுபட்டு வைக்கப்படும். கொஞ்சம் பழசானாலும் பழைய மது போல…