Archive For The “பொது” Category
excerpts from my forthcoming novel ‘Ramoji’ (being edited) டீ குடித்து விட்டு யுத்தத்தைத் தொடர்ந்து ஒரு தோளில் கனமான கதர்ப்பை. கையில் தூக்குப் பாத்திரத்தில் பலகாரம். நகரவே கஷ்டமாக இருந்தது. நடக்க வேறே வேண்டும். “விறுவிறுன்னு வாங்க”, ஆராவமுது நடக்க, பின்னால் நான். தண்டியில் உப்புக் காய்ச்ச மகாத்மா கூட இவ்வளவு வேகமாக நடந்திருக்க மாட்டார். இனியும் நடக்க வயது இடைஞ்சல் செய்யும். 1930-இல் அவர் நடந்து இப்போ பதினாலு வருஷமாச்சே. நான் கையில்…
யானைக்கவுனி தாண்டுதல் மாதம் ஒரு தடவை மெட்றாஸில் இருந்து திருப்பதிக்கு நடந்து, அங்கே போய்த் தரிசனம் செய்து, திரும்பி நடந்தே மெட்றாஸ் வந்து சேர்கிறவர். ஆராவமுதன். மெட்றாஸிலிருந்து திருப்பதி கணிசமான தூரம். இது எப்படி சாத்தியம்? நான் அவரிடம் ஒரு முறை ஆர்வத்தோடு விசாரித்தேன் இரண்டு வருஷம் முந்தி ஒரு சாயந்திர நேரம் அது. ஆராமுது என்னைப் பக்கத்தில் உட்கார்த்திச் சொன்னது இது – ”உமக்கே தெரியுமே மதறாஸில் இருந்து திருப்பதி எண்பது மைல் தூரம். இது…
Excerpt from my forthcoming novel Ramoji மயில் குயிலாச்சுதடி அக்கச்சி சூப்ரண்டண்ட் பந்துலு சார் சுமாராகப் பாடக் கூடியவர் என்று கோட்டையில் பரவலாகப் பரவிய தகவல். அவர் பாட்டுப்பாட கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட மாட்டார். கோட்டையில் பிரிட்டீஷ் சக்கரவர்த்தி படம் போட்ட உறையில் வந்த சர்க்குலர், பைல்களுக்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜையில் வைக்கும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்தில் ஒரு மன்னர் வாழ்த்து, ஒரு தெய்வ வாழ்த்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்…
1944 மார்ச் ”ரத்னா, என் சீமாட்டி, என் சக்ரவர்த்தினி, குட் மார்னிங்க். உன் பெயர் தினசரி பேப்பரில் வந்திருக்கே. பார்த்தாயோ. க்யாதி மிகுந்து விட்டாயடி பெண்ணே. ஆயிரம் அபிநந்தனம் சொல்லி உன் காலைப் பிடித்து நமஸ்காரம் செய்கிறேன்”. ஊஞ்சலில் ஜோடியாக அமர்ந்து, கையில் விரித்துப் பிடித்த வாரப் பத்திரிகையோடு ரத்னாவின் இடுப்பை வளைத்த நான், மனம் முழுக்க அடர்ந்து பொங்கிய பெருங் களிப்போடு சொன்னேன். “இது காலுமில்லை, அது டெய்லி பேப்பரும் இல்லை” என்று நானும் கூடச்…
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 4 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு திசைத் தெருவுக்கு அதேபடிக்குத்தான் பெயர் இருக்கும். ஜம்பமாக ரத்னாபாயிடம் சொல்லி விட்டு சைக்கிளில் இரண்டு பேரும் ஏறிக்கொண்டு முன்நோக்கி ஊர, தென்மேற்கிலே கிடக்கும் தெருவுக்கு இந்த ராத்திரி விடிவதற்குள் போய்ச் சேருவோம் என்றே தோன்றவில்லை. மார்கழிக் குளிர் சன்னமாகக் கூட வர நீண்ட பாதை. மேலே அட்டை ஷேடு வைத்து அடைத்த பெட்ரோமாக்ஸ் விளக்கோடு யாரோ சைக்கிளில்…
புது நாவல் – ராமோஜிகளின் கதை அத்தியாயம் 3 பகுதிகள் இரா.முருகன் 1944 டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை ராத்திரி ஏழரை மணிக்கு ’யுத்தம் முடியும்வரை கண்டிப்பாக தேசிய சர்க்கார் கிடையாது’ என்று வைஸ்ராய் வேவல் பிரபு சொன்னதாக ரேடியோவில் நியூஸ் படித்து முடிந்த பிறகு ரேடியோவை அணைத்து விட்டு, ஏர் ரைட் வார்டன் வேஷம் கட்டத் தயாரானேன். சாப்பிட்டு விட்டுப் படி இறங்கலாம் என்று ரத்னாபாய் தடுப்பாள். அவள் வார்த்தைக்கு இன்றைக்கு மட்டுமாவது தலை வணங்க வேண்டாம்…