Archive For The “பொது” Category
ட்ராமில் போவதா, சைக்கிள் மிதித்து ஆபீஸ் போவதா என்று யோசித்து, ட்ராமே சரிப்படும் என்று முடிவு செய்தேன். ராத்தூக்கம் சீராக இல்லாமல், தலை கிறுகிறுத்து, உடம்பு சமநிலை தவறி ஒரு பக்கமாகக் கொண்டுபோய்த் தள்ளுகிற அயர்ச்சி அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தது. அதோடு நீளநெடுக சைக்கிள் மிதித்து ஆபீஸ் போய்த் திரும்ப சிரமமாக இருக்கும். ட்ராம் என்னதான் மெல்ல ஊர்ந்தாலும் ஒன்பதரை மணிக்கு கோட்டைக்குள் நான் நுழையும்படியாக சேர்ப்பித்து விட்டது. ஒரு சிறிய கூட்டம் எதிர்பார்ப்போடு எனக்காகக் காத்திருந்தது….
பாரிஸ் ஸ்வீட்ஸ் கம்பெனியாரின் தேங்காய் துருவிப் போட்ட மெல்லிசுத் தட்டைச் சாக்லெட்களையும் முரமுரவென்ற பெரீஸ் வெண்ணெய் பிஸ்கட்களையும் ரத்னா மூக்குத் தூளுக்கு அடுத்தபடி நேசிக்கிறாள். பாலில் தோய்த்தால் விநோதமாக சீரக வாடை அடிக்கக் குழைந்து போகும் மில்க் ரஸ்க் கூட அவளுக்கு இஷ்டம் தான். வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆபீசில் இருந்து வரும்போது பிராட்வே பேக்கரிக்கடையில் இந்த உருப்படிகளை வாங்காமல் வருவதில்லை. இப்போதெல்லாம் ராயர் நெய்மிட்டாய்க் கடைக்குப் போவதில்லை. கடை அடைத்து வைத்திருக்கிறது. ஊர் பற்றி எரியும்போது, அல்வாவும்,…
மங்கலாக மின்னிக் கொண்டிருந்த நாலைந்து நட்சத்திரங்களும் ஒரு ராப்பறவையையுமாக ஆகாசப் பரப்பு கிடந்தது. நான் போர் விமானங்கள் எந்த வினாடியும் எங்கள் தலைக்கு மேலே பறந்து கம்பளம் விரித்தது போல் நெருக்கமாக எங்களைச் சுற்றிக் குண்டு வீசும் என்று எதிர்பார்த்து, ஷெல்டருக்குள், ரத்னா தோளில் தலை சாய்ந்திருந்தேன். ஒரு சத்தமும் இல்லை. ஒரு விமானமும் பறந்து போகவில்லை. அரைமணி நேரத்தில் விமானத் தாக்குதல் இல்லை என்று அறிவிக்கும் ஆல் க்ளியர் சைரன் கேவல் இன்றி நீண்டு தீர்க்கமாக…
Excerpts from my forthcoming novel, ‘Ramoji’ சைரன் ஒலித்த ராத்திரி —————————————- நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கற்பகாம்பாள் சந்நிதியிலிருந்து பெரிய குருக்கள் கையில் தீபாராதனைத் தட்டோடு வெளியே வந்தார். “வாரும் ஓய் ராமோஜி. என்ன தேடிண்டிருக்கீர்?” அவர் கேட்டார். “இங்கே வெடவெடன்னு ஒரு சின்ன வயசுக் குருக்கள் நாயன்மாருக்கெல்லாம் தினசரி உடுத்தி விடுவாரே, இருக்காரான்னு பார்க்கறேன்.. அழுக்கு வேஷ்டி இல்லேயேன்னு அறுபத்து மூணு நாயன்மார்கள்.. சரி மூணு பெண் நாயன்மார்களை விட்டுடலாம்.. அறுபது நாயன்மார்கள்…
excerpt from my forthcoming novel ‘Ramoji’ – being edited அப்பாஜி நினைவில் ————————— “நிச்சயம் பராசக்தி நிமிஷாம்பாள் அம்பா-வை தரிசிச்சு லோக ஷேமத்துக்காக ப்ரார்த்தனை செய்யணும். ஆனாலும், கற்பகாம்பா கிட்டே இன்னிக்கு வரேன்னு சொல்லிட்டு நிமிஷாம்பா கோவிலுக்குப் போகலாமா? நாளைக்கு சீக்கிரம் ஆபீசிலே இருந்து வந்துடறேன். சௌகார்பேட்டை கோவில் ஒண்ணு விடாம போவோம். இப்போ மயிலாப்பூர்”. நான் என் பங்கு நியாயத்தைச் சொன்னேன். சௌகார்பேட்டை போய்த் திரும்ப மெத்த நேரம் பிடிக்கும். யுத்த காலத்தில்,…
Excerpts from my forthcoming novel ‘Ramoji’ – awaiting edit 1942 எல்லார் நாக்கிலும் எவாகுவேஷன் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னாபாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு…