Archive For The “பொது” Category
”சார், புவனா உங்க அத்தங்கா காருவா?” ”பின்னே இல்லியா?” ”சார், கண்ணே பட்டுடும்.. அதான் முன்னாடி சொல்லல்லே.. புவனாவை பார்க்க இன்னும் நூறு தடவை தசாபதி பார்ப்பேன்..” நான் புவனா தாசனாக நெக்குருகி நின்றேன். பந்துலு சந்தோஷமடைந்து பெருந்தெய்வத்தின் ஆராதகனான சிறு தெய்வமாக வாய் மலர்ந்தார் – ”உம்மை ஒரு தடவை அத்தங்கா வீட்டுக்குக் கூட்டிப் போறேன்..” நான் கன்னத்தில் போட்டுக்கொண்டு அவரைத் தொழவோ புவனாவை அவரில் கண்டு முத்தமிட்டு அணைக்கவோ செய்யாமல் நன்றி சொல்லி ஆபீஸ்…
நாலு மணிக்கு வீட்டுக்குப் போகிறேனா என்று பார்க்க சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் சீட்டுக்கு வந்துவிட்டார். இதோ போறேன் சார் என்று அவசரம் காட்டி சாப்பாட்டுப் பையில் ஸ்பூனைத் தேடி எடுத்து மறுபடி உள்ளே போட்டேன். நெய் வாசனை அடிக்க இன்னும் ரெண்டு கரண்டி அவல் கேசரி, ரத்னா கை கிண்டிய அமிர்தம் உள்ளே பாக்கி இருந்ததை போகிற வழிக்குப் புண்ணியமாகத் தின்றபடி கிளம்ப உத்தேசம். “நானும் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பறேன்.. இன்னிக்கு எங்க அத்தங்கா வீட்டுக்குப் போகவேண்டியிருக்கு”…
அட்டெண்டென்ஸில் கையெழுத்துப் போட்டு உள்ளே போகும்போது சூப்பரிண்டெண்ட் பந்துலு சார் கூப்பிட்டார் – ராமோஜி இது என்ன உங்க கையெழுத்து போடாம லக்ஸ்னு என்னமோ எழுதியிருக்கீர்.. அது லக்ஸம்பர்க் ஸ்ட்ரோக் ஆச்சே… ஷார்ட் ஹேண்ட் படிக்க ஆரம்பிச்சிருக்கீரா?” சுதாரித்துக் கொண்டேன். “பிட்மென் ஷார்ட்ஹாண்ட் புக் செகண்ட் ஹேண்ட் காப்பி மூர்மார்க்கெட்டுலே கிடைச்சது.. நானே பழக ஆரம்பிச்சிருக்கேன் சார்” என்றேன். ”இந்த ஷார்ட் ஹாண்டே இப்படித்தான் … பழக ஆரம்பிச்சா மனசுலே ஷார்ட்டா ஆக எல்லாத்தையும் குறுக்கி அதை…
புவனா இன்னும் என் மனதிலும் அவள் மனதிலும் நிழலாடிக்கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. என்றாலும், நான் புவனா மீது பித்தாகிப் போனது என்னமோ நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிக்கொண்டு இருக்கிறதே தவிர குறையவில்லை. படுக்கையில் சுமுகமான இரண்டு விலங்குகளாக ரத்னாவும் நானும் காதல் பரிமாறிக்கொண்டோம். எல்லாம் முடிந்து உறக்கத்தில் நழுவும்போது தெலக்ஸ் புவனாவின் சிரிப்பு என்னைச் சுற்றிச் சுழன்றது. கொடிமின்னல் வெட்டிப் பளிச்சிடும் ஒளியோடு அலையும் ஓர் அழகான பிசாசாக புவனா என் விழிகளுக்குள் மின்னி வர நான் எப்போது…
விலாசினி என்னை விட்டுவிட்டு ரத்னாவிடம் படம் எப்படி இருந்துதுன்னு கேட்டாள். அது எனக்குமான கேள்விதானென்று தெரியும். ரத்னா என்ன பதில் சொல்கிறாள் என்று ஒரு வினாடி ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தேன். ”படம் நல்லா இருக்கு தான். ஆனா ஹீரோயின் தான் சகிக்கலே. ஒட்டடைக்குச்சிக்கு புடவை சுத்திவிட்ட மாதிரி ஒரு உடம்பு.. அதுலே என்னதான் கண்டாங்களோ ஆம்பளைங்க எல்லாம்”. ரத்னா சொன்னாள். ”எல்லோரும் இல்லே.. எனக்கு ஸ்கூல் வாத்தியாரா வரும் சக்ரபாணியை ரொம்ப பிடிச்சிருந்தது”. கேளப்பன் படு…
அடுத்த நிமிஷம் பிரிட்டீஷ் யுத்தப் பிரச்சாரப் படம். அப்புறம் சிக்கனம் பேணுவோம் என்று ஒரு சர்க்கார் விளம்பரப்படம். எல்லாம் முடிந்து தசாபதி. படம் என்னை குப்புற விழுத்தாட்டியது. நான் தசாபதியை நாடகமாக ஒற்றைவாடை டிராமா கொட்டகையில் சின்ன வயசில் அப்பாஜி கையைப் பிடித்துக் கொண்டு போய்ப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் ஹோஹோவென்று சிரிக்க எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை என்றாலும் அப்பா அவ்வப்போது பெரிய பையன்கள் கழுத்தில் மாட்டிய தகரத் தட்டில் வைத்து நொறுக்குத்தீனி, கடலை உருண்டை, பிஸ்கட் என்று…