Archive For The “பொது” Category

ராமோஜியம் – என் அடுத்த புதினம் – ஜி.என்.செட்டி தெருவில் ஒரு தெலக்ஸ் 1942

By |

”அம்மாவுக்கு சொந்தக்காரங்க ஹை, தும் ஜாவ். ஜாவ்” என்று பந்துலு ஏதோ ஹிந்தி பேசுகிற பாவனையில் சொல்ல, தும் ஜா என்று அவரைப் பிடித்துத் தள்ள பிரம்போடு முன்னால் வந்தான் அந்த இளம் கூர்க்கா. சூப்பரிண்டெண்ட், அத்தங்கா, மாகாணிக்கிழங்கு இதெல்லாம் அவனுக்கு அனாவசியம் என்பதோடு, பந்துலு சாருக்கு இதையெல்லாம் இந்தியில் சொல்ல வராது என்பதும் புலப்பட்டது. “க்யா வேர் இஸ் தட் ஓல்ட் கூர்க்கா ஹை?” அவனுக்கு இதுவும் புரியவில்லை. பந்துலு சார் பயனின்றி உள்ளே நோக்கினார்….




Read more »

ராமோஜியம் – நாவலிலிருந்து – இன்னொரு 1942ம் ஆண்டு அத்தியாயம்

By |

நாங்கள் பத்தே நிமிடத்தில் கிளம்பினோம். பந்துலு சார் தன் ஜோல்னாப் பையையும் நான் என்னுடையதையும் எடுத்து மாட்டிக் கொண்டோம். சாப்பாட்டு பாத்திரம்? எதுக்கு இங்கேயே இருக்கட்டும். பெரிய ஸ்டார் வீட்டுக்கு எச்சில் பட்டு கழுவாத அலுமினியப் பாத்திரத்தோடா போவது? பந்துலு சார் முன்னேற்பாடாக இன்று எலுமிச்சை சாதம் இலையில் பார்சலாகக் கட்டி நியூஸ் பேப்பரில் பொதிந்து கொண்டு வந்திருந்தார். அவருக்கு அத்தங்காளைப் பார்க்கப் போவது ஏற்கனவே தெரியும். எனக்கும் தெரிந்திருந்தால் அதேபடி செய்திருப்பேன். போகட்டும், புகார் செய்ய…




Read more »

ராமோஜியம் நாவல் – தெலக்ஸ் புவனா வந்த இன்னொரு 1942 அத்தியாயத்திலிருந்து

By |

இந்தக் காலம் என்கிற விஷயம் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று. சில பொழுது, ஒரு யுகம் போன மாதிரி ஒரு மணி நேரம் மிக மெல்ல ஊர்ந்து போகும். இன்னும் சில நேரம் காலம் முன்னால் போய் சட்டென்று நின்று கொஞ்சம் பின்னால் போய் கண் விழித்துப் பார்ப்பதற்குள் மறுபடி முன்னே போக இதெல்லாம் ஏற்கனவே நடந்ததே என்று குழம்ப வைக்கும். சில பொழுது இமை நேரத்தில் ஒரு மாசம் போய் விடும். அது போனது கூடத்…




Read more »

ராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து – 1942 இன்னொரு அத்தியாயம்

By |

”இன்னிக்கு ஏ ஆர் பி டியூட்டி இல்லைதானே?” எங்கே நான் மறந்துவிட்டேனோ என்று நினைவு படுத்திக் கேட்டாள். இல்லை என்றேன். இந்த வாரத்துக்கான நாலு இரவு ரோந்தும் நான் முடித்திருக்கிறேன். பார்க் போய் விட்டு வரும்போது சுபாங்கி அம்மாள் வீட்டு வாசலில் இருந்து ரத்னாவைப் பார்த்துக் கேட்டாள் – “ஏண்டி பொண்ணே, ரேஷன்லே உளுத்தம்பருப்பு நாளைக்கு போடறாங்களாம். போகலாமா?” ஏதோ ரேஷனில் ஆளுக்கு ஒரு பவுன் மோதிரம் வெகுமதியாகக் கொடுப்பது போல் இரண்டு பெண்மணிகளும் வெகுவாக சந்தோஷப்பட்டார்கள்….




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – விலாசினி அளித்த விளக்கம் – தசாபதி 1942

By |

காபி எடுத்து வந்தபோது ”உடனே கிளம்பு, பார்க் போகலாம்” என்றேன். போகலாமே என்றாள் ரத்னா, முகம் மலர்ந்து. அவள் காலையில் நான் நடந்து கொண்டதை மறந்து எப்போதும் போல் ஆகியிருந்தாள். ”இந்த டைப் இன்ஸ்டிட்யூட் பத்தி எதிர்வீட்டு விலு என்ன சொன்னா தெரியுமா?” விலுவாமே. ஜாக்கிரதையா இருக்கணும். இவ சொல்றாளேன்னு நானும் விலுன்னு சொன்னா, நேர்லே போய் கொஞ்சுங்க என்று படாரென்று முகத்தில் அறைந்தது போல் சொல்லி விட்டுப் போயே போய் விடுவாள். ”என்ன சொன்னாங்க அந்த…




Read more »

ராமோஜியம் நாவலில் இருந்து – The quick brown fox jumps over the lazy dog

By |

ரத்னாவிடம், ஏதோ சாதனை செய்த மாதிரி, கையில் பிடித்திருந்த காகிதத்தை நீட்டினேன். “இது எதுக்கு எனக்கு டைப் அடித்த காகிதம்? தெலக்ஸ் புவனாவை வச்சுக்க என் சம்மதம் கேக்கறீங்களா?” என்று கேட்கவில்லை. என் சிரிப்பைப் பார்த்து அவளும் சிரித்தாள். ”தெருவிலே கிடக்கிற காகிதத்தை எல்லாம் ஏ ஆர் பி வார்டன் பொறுக்கி எடுக்கணுமா என்ன?” என்றாள். ”சாப்பிட என்ன பண்ணியிருக்கே அன்பே, வயிறு இரையுது” என முறையிட்டேன். உப்புமா குழக்கட்டையும் புளிச் சட்டினியுமாம். அவள் சொல்லி முடிக்கும்…




Read more »