Archive For The “பொது” Category

ராமோஜியம் – அடுத்து வரவிருக்கும் என் நாவலில் இருந்து – 1942 செப்டம்பர் மதறாஸ்

By |

விடிந்தால் செவ்வாய். என் வீடு பத்து நிமிஷத்துக்காவது பிரபலத்தின் வருகையால் பெயர் பெறப்போகிற தினம். நானே எதிர்பாராத விதமாக சத்யநாராயண பூஜையை நாளை மறுநாள் புதனில் இருந்து ஒருநாள் முன்னதாக செவ்வாய்க்கு மாற்றி வைத்தாள் ரத்னா. சுபாங்கி அம்மாள். விலாசினி ஆகிய நிபுணர்கள் ஆலோசித்து, செவ்வாயும் சிலாக்கியம் என்று சொன்னார்களாம். ராமண்ணா ஜோசியரும் ஒரு ரூபாய் காணிக்கை வாங்கிக்கொண்டு அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று சோழி உருட்டிக் கணக்குப் போட்டுச் சொன்னாராம். தெலக்ஸ் புவனாவுக்கு ஆஸ்தான ஜோசியராக…




Read more »

நான் எழுதி வரும் ‘ராமோஜியம்’ நாவல் – 1942 மழைக் கால சென்னை – சில பகுதிகள்

By |

”உங்களுக்கு பந்துலு சார் தான் தெரியும்.. எனக்கு அவரோட ஒய்ஃபையே தெரியும்.. அந்த பூலோக சுந்தரி, பந்துலு சாரோட அத்தங்கா, மசக்கை வந்த கர்ப்பிணிப் பொண்ணு மாதிரி மாகாணி ஊறுகாய் வேணும்னு பந்துலு சார் வீட்டம்மா கிட்டே ஆசைப்பட, இவங்க என்னை வண்டிச் சத்தம் கொடுத்து கூட்டிக்கிட்டு முந்தாநாள் கொத்தவால் சாவடியிலே காய் வாங்க போனாங்க.. நான் தான் செலக்ட் பண்ணி பேரம் பேசி வாங்கிக் கொடுத்தேனாக்கும்..” அவள் மாடப்புரையிலிருந்து ஒரு சிமிழை எடுத்து சிட்டிகை ஆபீசர்ஸ்…




Read more »

ராமோஜியம் – என் அடுத்த நாவலில் இருந்து – மழை இரவுக்குப் பின் வரும் காலை – சென்னை 1942

By |

காலையில் மழை விட்டு வானம் வெளிறி இருந்தது. கையில் காப்பிக் கோப்பையுடன், தினமணி பேப்பர் படித்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். ”என்ன சார், உங்க வீட்டுலே ப்யூஸ் போகலியா?”. ஓவென்ற இரைச்சலாகப் பேச்சு சத்தம். எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடுதான். அவருக்கும் ரத்னாவிடம் சொல்லி ஒரு காப்பியை வரவழைத்தேன். மகிழ்ச்சியாகக் குடித்து விட்டு ஊர் வம்புக்குத் தாவினார் மணவாள நாயுடு. “சார் ஜப்பான் ப்ளேன் குண்டு போட வந்தா ஓன்னு சங்கு பிடிக்கணும்னு உங்களைப் போல ஏ ஆர் பி…




Read more »

வெளிவர இருக்கும் என் நாவல் ‘ராமோஜியம்’ – சென்னையில் ஒரு மழைக்கால இரவு 1942

By |

மேற்கே தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் ஏதோ வெளிச்சம் மின்னி மின்னி வந்து போனது. டார்ச் வெளிச்சம். உளுந்து கடத்தல் ஆரம்பமா? அடுத்த விநாடி விளக்கு வந்தது. தங்கப்பன் முதலாளி வீட்டு காம்பவுண்டில் இரண்டு பேர் சிரமத்தோடு ஒரு சாக்கு மூட்டையை வெளியே சிறு மோட்டார் வேனில் ஏற்றுவது தெரிந்தது. வேன் சத்தமிட்டுக் கிளம்பும் ஓசை. விளக்கை அணைத்து விட்டு வந்தேன். ஒரு மணி நேரம் கழித்து, குளித்து, ராத்திரி ஒன்பதுக்கு, ஏ ஆர் பி வார்டனாக…




Read more »

ராமோஜியம் – என் அடுத்த நாவலில் இருந்து – 1942 மழைக்கால இரவு – புது மாம்பலம், மதறாஸ்

By |

வயிறும் மனதும் நிறைய தெலக்ஸ் புவனாவுக்கு நன்றி சொல்லும்போது சட்டென்று பொறி தட்டியது. வரும் செவ்வாய்க்கிழமை ரத்னா எங்கள் வீட்டில் சத்யநாராயண பூஜை வைத்திருக்கிறாள். உடனே ஒரு யோசனை. “மேடம், செவ்வாய்க்கிழமை எங்க கிரஹத்துக்கும் நீங்க வந்திருந்து சிறப்பிக்கணும்.. என் சார்பிலேயும் என் மனைவி ரத்னாபாய் சார்பிலேயும் கேட்டுக்கறேன்.. ஜோசியர் வீட்டுக்கு எதிர்லே தான்.. சொன்னேனே.. ஒரு நிமிஷம் ஒகடி ஒக நிமிஷமு..”. எனக்குத் தெரிந்த தெலுங்கு அவ்வளவுதான். ”ஓ அதுக்கென்ன வரலாமே. இந்த மேடம் எல்லாம்…




Read more »

விருந்துக்குப் போனவர்கள் – வெளிவர இருக்கும் ராமோஜியம் நாவலில் இருந்து

By |

உள்ளே இருந்து நடு வயது அம்மையார் ஒருவர், கொஞ்சம் சுபாங்கி அம்மாள் ஜாடையும், அவளைப் போல் மூன்று பேரை ஒரே உடம்பில் அடைத்த பருமனுமாக வந்து ரண்டி ரண்டி என்று வரவேற்க, இந்தியில் இல்லை, தெலுங்கில் என்று மனதில் திடமாகச் சொல்லிக்கொண்டு கைகூப்பினேன். தெலக்ஸ் புவனாவோட சித்தி என்று பந்துலு சார் காதில் சொன்னார். கித்தான் பையைப் பிரியத்தோடு தூக்கி பந்துலு சார் சித்திகாருவிடம் கொடுத்தார். அந்த சுந்தரமான வாசனையில் மனம் பறிகொடுத்த மாதிரி ஒரு வினாடி…




Read more »