Archive For The “பொது” Category

ராமோஜியம் நாவல் – இறுதி அத்தியாயத்தில் இருந்து – ராமோஜி ரத்னாவின் நீதிமன்றத்தில்

By |

”கல்யாணம்னு நான் பத்திரிகை வச்சா வரமாட்டீங்க ரெண்டு பேரும், உங்க கல்யாணத்துக்கு அழைக்க மாட்டீங்க.. நல்லா இருங்கப்பா”. நான் ராஜுவிடம் சொன்னேன். ”சே அப்படியெல்லாம் இல்லே.. நீ வீடு மாத்தி யாருக்குமே புது அட்ரஸ் சொல்லலியே.. ” ”சரி, சண்டை அப்புறம் வச்சுக்கலாம்.. கோவிலுக்குப் போய்ட்டு வந்துடறோம்” என்று நானும் ரத்னாவும் கிளம்புவதற்குள் ராஜு வீட்டுக்குள் ஓடிப் போய் தன் விசிட்டிங்க் கார்டை எடுத்து வந்து கொடுத்தான். குடந்தை என்று தமிழிலும் கும்பகோணம் என்று இங்கிலீஷிலும் ஊர்ப்பெயர்…




Read more »

ராமோஜியம் நாவல் – இறுதி அத்தியாயத்தில் இருந்து – கும்பகோணம் 1947 – மீண்டும் காமாட்சி ஜோசியர் தெருவில்

By |

வலது புறம் காந்தி பூங்கா திருப்பத்தில் பரபரப்பாக ஒரு இட்லிக்கடை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. வரிசையாக அடுப்பில் வைத்த இட்லி கொப்பரைகளைத் திறக்க நீராவி வாடையோடு, கமகமவென்று உளுந்தும் அரிசியும் கலந்து மல்லியப்பூ இட்லி வாசம். வயிற்றையும் வாயையும் நாசியையும் சுண்டி இழுத்தது அது. கடை நடத்தும் இடம் வெகு சுத்தமாக இருந்தது. தட்டுகளும் பாத்திரங்களும் கூட. சாப்பிட்டுப் போகலாமா ரத்னாவைக் கேட்டேன். வாங்கிட்டு போயிடலாமா என்று அவள் கேட்டாள். ”தெருவிலே ஓரமா பெஞ்ச் போட்டு…




Read more »

நாவல் ராமோஜியம் -மீண்டும் கும்பகோணம் துக்காம்பாளையத் தெரு 1947

By |

சக்ரபாணி கோவிலில் எட்டுக்கால் வட்ட மண்டபத்தைச் சுற்றிப் புல்பூண்டுகள் நீக்கி சுத்தமாகப் பெருக்கிக் கோலமிட்டு வைக்கப்பட்டிருந்தது. சிமெண்ட் காணாத கோவிலாகப் பத்து வருடம் முன் பார்த்தது இப்போது அங்கே இங்கே ஒட்டு வேலையும், ஓரமாகச் சின்ன மேடையும், நடைக்கு ரெண்டு பக்கமும் ஒற்றையடியாக சிமிட்டித் தரையுமாக பளிச்சென்று வித்தியாசம் தெரிந்தது. வட்ட மண்டபம் கடந்து உள்ளே போனோம். பிரகாரத் தூண்களைச் சுற்றிப் பழைய காரையும் சுண்ணாம்பும் பூசிய சிறு மேடைகள் பழைய நண்பர்களாக அந்நியோன்யத்தைச் சொல்லாமல் சொல்லின….




Read more »

ராமோஜியம் நாவல் – மீண்டும் கும்பகோணம் வருடம் 1947 -இறுதி அத்தியாயம் சில பகுதிகள்

By |

ஏழு மணிக்கெல்லாம் வீடு. சாப்பிட்டு விட்டு எட்டரைக்கெல்லாம் உறக்கம். விடிந்து சனிக்கிழமை காலை ஏழரை மணிக்கு கும்பகோணம் போக பஸ்ஸைப் பிடிக்கலாம் என்று ரத்னாவிடம் சொல்லியிருந்தேன். காலையில் எஸ்பிளனேடில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் போகத் தயாராக ரத்னா வீட்டுக் கதவைப் பூட்டப் போனபோது நான் என்ன அவசரம் என்று கேட்டுக் கையமர்த்தினேன். ”உங்களுக்கென்ன சாவகாசமா அடுத்த பஸ்ஸிலே போகலாம்னு சொல்லுவீங்க. எந்த பஸ்ஸுனு திட்டம் பண்ணி வச்சிருக்கமோ, அதிலே போகாட்ட கஷ்டமாயிடும்” என்றாள் அவள். வா, போகலாம்….




Read more »

என் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை

By |

ராமோஜியம் நாவல் நூல் வடிவில் பிரசுரிப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. இது நூலின் முன்னுரை ராமோஜியம் நாவல் முன்னுரை பொடி என்று ஒரு சிறுகதை எழுதினேன். இதை எழுதுகிற தேதிக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் எழுதியது அது. ஏன் எப்படி என்றெல்லாம் தெரியாது. 1930-களின் சென்னை. அங்கே, ராமோஜி என்ற தஞ்சாவூர் மராட்டா இளைஞன். அவன் கல்யாணம் செய்துகொள்ளும் ரத்னா பாய் என்ற அதிரூப சுந்தரி. ரத்னாவின் மூக்குப்பொடி பழக்கம், பொடி டப்பாவைத் தேடிய முதலிரவு என்று அந்தக்கதை…




Read more »

புதிய சிறுகதை : ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம் – இரா.முருகன்

By |

புதிய சிறுகதை : ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம் – இரா.முருகன்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல் நிறப் பெட்டிகளும், எப்போதும் அடைத்திருக்கும் சிவப்பு ஜன்னல்களுமாகப் பனி பூசி வந்த ரயில் அது. மைனா இறங்கி ஸ்டேஷனுக்கு வெளியே போய் குறுகிய பாதையில் நடக்கும் வரை வண்டி கூவென ஒலியெழுப்பி நின்றது. குடியிருப்புக் குறைந்த ஒரு பழைய சிறு நகரம். நாரைகள்…




Read more »