Archive For The “பொது” Category

லண்டன் டயரி – நூலில் இருந்து

By |

லண்டன் டயரி – நூலில் இருந்து

என் ‘லண்டன் டயரி’ பயண நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம், Stall F 7, Chennai Book Fair 2021 ) வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லா கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில். கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஒரு இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய…




Read more »

நாவல் ‘1975’ – மதிப்புரை – வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி ஆர்.வி.எஸ்

By |

நாவல் ‘1975’ – மதிப்புரை – வெங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி ஆர்.வி.எஸ்

நண்பர் ஆர்.வி.எஸ் எழுதிய 1975 நூல் மதிப்புரை. அவருக்கு என் நன்றி சங்கரன் போத்தி ஒரு வங்கி பணியாளர். எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸ், அரசூர் மற்றும் புதுதில்லியில் பணியாற்றுகிறார். இருபது அம்சத் திட்டத்தில் ஊரெல்லாம் கடன் வழங்குகிறார்கள். வங்கிகள் எப்படி அப்போது இருந்தன என்பதை ஒரு வசனமாக இரா. மு எழுதுகிறார். >>>>>>>>>>>> ”வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்கூடாது, வழங்கிகளாக இருக்க வேண்டும்” >>> ”25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு…




Read more »

லண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)

By |

லண்டனில் சுற்றித் திரிந்த போது – மெய்டன் லேன் (கோவண்ட் தோட்டப் பகுதி)

என் லண்டன் பயண நூல் ‘லண்டன் டயரி’யில் இருந்து – மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து ‘திக்’கான டீக்காஷனை ·பில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக்கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு…




Read more »

“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.

By |

“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.

நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார். ”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”, ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ….




Read more »

சுஜாதா என்ற கவிஞர்

By |

சுஜாதா என்ற கவிஞர்

சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்: சுஜாதா’ புத்தகத்திற்காக எழுதி, நீளம் கருதி நான் வெளியிடாமல் போன ஒரு சிறு அத்தியாயம் இது : சுஜாதாவின் நாலாயிரத் திவ்யப் பிரபந்த ஈடுபாடு, தமிழ் மரபுக் கவிதையில் ஈடுபாடாக முகிழ்ந்தது. முக்கியமாக வெண்பாப் பிரியர் அவர். வாசகர்களை வெண்பா எழுதத் தூண்டியதோடு அவ்வப்போது அவரும் உற்சாகமாக நேரிசை வெண்பா எழுதினார். வெண்பாவில் எத்தனையோ தலைமுறை கடந்து இளையோரின் விருப்பம் அரும்பியிருக்கிறது என்றால் சுஜாதாவின் அட்டகாசமான, தற்காலக்…




Read more »

சென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்

By |

சென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2021 நேற்று, பிப்ரவரி 24 2021 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடந்து வருகிறது. கண்காட்சியில் என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகம் (நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம்) F 7 அரங்கில் காட்சிக்கு / 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ள ஏராளமான நூட்களில் என்னுடையவையும் உண்டு. அவற்றில் சில இந்தப் பதாகை எடுத்துக் காட்டுகிறவை. வாங்கிப் படித்து வாசிப்பனுபவம் பகிர நண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.




Read more »