Archive For The “பொது” Category

மருமக்கள் தாயம் என்ற அலிய சந்தான நடைமுறை 1604-ம் ஆண்டு

By |

மருமக்கள் தாயம் என்ற அலிய சந்தான நடைமுறை 1604-ம் ஆண்டு

மிளகு நாவல் – ஜெருஸுப்பா, ஹொன்னாவர், எட்டாக்கனி வீட்டு வளாகத்தில், வீடு நிற்கும் இடத்துக்குப் பின்னால் இன்னும் நாலு வீடு கட்ட முடியுமளவு நிலம் இருந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு நேரே தெற்கில் இருந்த இந்த நிலப்பரப்பும் சுத்தம் செய்யப்பட்டு பந்தல் வேய்ந்து கல்யாணத்துக்கான போஜனசாலை ஆனது. இன்றிலிருந்து நாளை மறுநாள் கல்யாணம் முடிந்து, அதற்கடுத்த நாள் முளைப் பாலிகை கரைத்து முடியும்வரை இனி விருந்து இங்கேதான். அப்புறம் மாப்பிள்ளை, மருமக்கள் தாயம் என்ற அலியசந்தான நடைமுறைப்படி பெண் வீட்டுக்குக்…




Read more »

மிளகு நாவலில் இருந்து நழுவி விழுந்த மீன்

By |

மிளகு நாவலில் இருந்து நழுவி விழுந்த மீன்

“வேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயிருந்தீங்க?” மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு வேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார். “நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு’ என்றார், தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி. ”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக…




Read more »

சதுர்முக பசதி என்ற சமணக் கோவில் – மிளகு நாவலில் இருந்து

By |

சதுர்முக பசதி என்ற சமணக் கோவில் – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து ”சதுர்முக பசதி. நான்கு வாயில் கோவில். பன்முக மெய்யின் உருவகம். உண்மை என்பது ஆன்ம லயிப்பாக இருக்கலாம். உண்மை என்பது மனதில் நான் யார் என்று சதா கேட்டுத் தேடியடைவதாக இருக்கலாம். உண்மை என்பது உறவுகளின் நதிமூலம் தெளிவதாக இருக்கலாம். உண்மை என்பது, நட்பும் காதலும் காமமும் பாசமும் சென்றடையும் இறுதி நிலையாக இருக்கலாம். தேடிப்போய்த் திரும்ப வந்தடைந்த தொடக்கமாக இருக்கலாம். உண்மை என்பது எண்ணங்கள் உருவாக்கிய இலக்கியமும், ஓவியமும், சிற்பமும், கடவுளும்…




Read more »

முகத்தில் பூசிய மிளகு விழுது -மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

By |

முகத்தில் பூசிய மிளகு விழுது -மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

குட்டி, நானே மொளகு விழுது எடுத்து தட்டுலே போட்டுக்கணுமா? அதுக்கு முன்னாடி அது நல்லா அரைச்சிருக்கான்னு பார்த்து சொல்லு கொஞ்சம். சொல்லியபடி லூசியாவின் தலையை மிளகு விழுதுக் கிண்ணத்துக்குள் அமிழ்த்தினான் அவன். ஓவென்று குரல் எடுத்து அலறினாள் லூசியா. ஐயோ கண்ணு எரியுதே.. ஒண்ணும் பார்க்க முடியலியே. குருடாகிட்டேன். இருட்டிட்டு வருது.. நெஞ்செல்லாம் எரியுதே.. கண்ணை கழுவிக்கணுமே தண்ணீ ஆல்வாரிஸ் சின்ஹோர் ஐயோ எரியுதே அவள் பக்கத்தில் அல்வாரிஸ் நடந்து மெல்ல அவளை அருகில் ஒரு நாற்காலியில்…




Read more »

மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா – மிளகு நாவலில் இருந்து

By |

மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா – மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி மிளகு தின்னும் போட்டியோடு ஒரு வசந்த விழா சீனாவும் தைவானும் அடுத்த வாரம், தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப் போகும் வசந்த விழா என்ற சீனப் பண்டிகைக்கு மிளகு தேவை. பெருமழையால் ஏற்பட்ட யாங்ட்ஸீ நதியின் வெள்ளப் பெருக்கு காரணம் நதிக்கரை கோடவுண்களில் சேமித்து வைத்திருந்த இந்திய இறக்குமதி மிளகில் பாதிக்கு மேல் கெட்டுப் போய்விட்டதாக சீன அரசாங்க யந்திரம் அறிவிக்கத் தாமதமாகிப் போனது. தைவான் சமாளித்துக் கொள்ளும்….




Read more »

தானே பொரித்துக் கொண்ட மீனும், மிளகுக் காப்பு போட்டுக் கொள்ளும் கோழியும்

By |

தானே பொரித்துக் கொண்ட மீனும், மிளகுக் காப்பு போட்டுக் கொள்ளும் கோழியும்

என் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறிய பகுதி லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்திப்போக வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கு ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கு அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள். இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, , மிளகு…




Read more »