Author Archive

கடவுளின் சகோதரியும் வரவேற்பறையில் ஆடும் மயிலும்

By |

கடவுளின் சகோதரியும் வரவேற்பறையில் ஆடும்  மயிலும்

வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல்களில் நான்காவது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. நூலில் அத்தியாயம் 4இல் இருந்து மிகவும் சாதாரணமான விஷயங்களைப் பற்றிக் கரிசனம் மேலிடக் கேட்கப் போகிறீர்கள் என்று பகடியாக அவள் கோர்த்துச் சொன்னதை வானொலியில் ஒலிபரப்புவார்களாம். நல்ல கூத்து இது. வைத்தாஸ் இருக்கும் இடத்தில் அந்த ஒலிபரப்பு போய்ச் சேரலாம். மற்ற நாடுகளில் இது ஒற்றர்களாலும், அரசாங்கப் பிரதிநிதிகளாலும், அமைச்சர், நிர்வாக அதிகாரிகளாலும் மறைபொருள் தேடிக் கவனமாகக் கேட்கப் படலாம். இந்த நாட்டின்…




Read more »

வெண்மை குறைந்த சீனி சேர்த்த, பால் அதிகம் கலக்காத தேநீர் தங்களுக்கு வந்து சேர்ந்ததா?

By |

வெண்மை குறைந்த சீனி சேர்த்த, பால் அதிகம் கலக்காத தேநீர் தங்களுக்கு வந்து சேர்ந்ததா?

வாழ்ந்து போதீரே நான்காவது அரசூர் நாவலாகும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து = நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் கலந்து கொடுக்கும் உதவியாளர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை அரசு பண்ணையின் தலைவர், மூத்த ஊழியர்கள் மூலமாகக் கொடுத்து அனுப்பியிருந்தாரா? அது நேரத்துக்கு வந்ததா?…




Read more »

நனவிடை தோய்தல். உணவிடை வாழ்தல்

By |

நனவிடை தோய்தல். உணவிடை வாழ்தல்

அரசூர் நாவல் வரிசையில் 4வது புதினம் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து நிறுத்து நிறுத்து நிறுத்து. நடுரோட்டில் தூறல் வலுத்த ஈரத்துக்கு இடையே போய்க் கொண்டிருக்கும் பஸ்ஸின் உள்ளே இருந்து எட்டிப் பார்த்துக் கூச்சல் போட்டான் திலீப். எதேதோ யோசித்தபடி வழக்கம் போல் ஸ்டாப்பைத் தவற விட்டாச்சு. மதராஸிகள் அதிகம் குடியிருக்கும் பிரதேசங்களில் மராத்தி இளைஞர்கள் ஊரே எனக்கு சொந்தம் என்ற மமதையோடு போகிற மாதிரிப் பார்த்துக் கொண்டு திலீப் நிதானமாக…




Read more »

இறந்தும் கொடுத்த மேலை சிவப்புச் சிந்தனையாளர்கள்

By |

இறந்தும் கொடுத்த மேலை சிவப்புச் சிந்தனையாளர்கள்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் 4வது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. அந்நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த சதுர்த்தியே வரப் போறது, இன்னுமா என்னை அனுப்பி வைக்கலே என்று திலீப்பைக் கேட்டார் அவர். அவன் பதில் சொல்லாமல்…




Read more »

சதுர்த்தி முடிந்து பொறுமையாகக் கடலில் கரைய நின்ற விநாயகர்

By |

சதுர்த்தி முடிந்து பொறுமையாகக் கடலில் கரைய நின்ற விநாயகர்

அரசூர் நாவல் நான்கு – வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து அகல்யாவும், சிரிப்பும், பேல்பூரியும், உயர்ந்து பொங்கும் கடல் அலைகளும் இல்லாத உலகம் அவன் போக வேண்டியது. அதுவும் இந்த ஆறு மாதத்தில் அவனுக்கு ஏற்கனவே அனுபவமான ’கொஞ்சம் போல் நிம்மதி’ சூழல் கூட இல்லை. அப்பா காணாமல் போனதில் தொடங்கியது இது. பரமேஸ்வரன் நீலகண்டன். ஐம்பத்தேழு வயது. தாடையில் மிகச் சரியாக நடுவில்…




Read more »

அலை ஓயாத அரபிக் கடல் பாடுகிறது

By |

அலை ஓயாத அரபிக் கடல் பாடுகிறது

அரசூர் நாவல் 4 : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் இரண்டில் இருந்து அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கிற நூல் இது அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம். திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும். ஹை டைட், ஹை டைட் என்று ஒரு…




Read more »