Author Archive

கற்றது மட்டும்

By |

கற்றது மட்டும்

இன்று சுஜாதா 80-வது பிறந்த நாள். இந்தக் கட்டுரை சற்றே சுருங்கிய வடிவத்தில் இன்றைய தி இந்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது. கற்றது இரா.முருகன் 1940-களின் இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களைப் பிணைத்துக் கொண்டு சொந்த வாழ்க்கையின் அபத்தங்களைப் புறம் தள்ளிச் செயல்பட அவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் இருந்தது. 1960-களின் இளைஞர்கள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் மறந்து முற்றாக ஈடுபட்டு அமிழ, இந்தி எதிர்ப்பு இயக்கம் இவர்களுக்குப் பற்றுக்கோடானது. ஆனால், 1950-களின் இளைஞர்கள்? இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். உணர்ச்சிகரமாகப்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 30 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 30                 இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பது இரா.முருகன் அமேயர் பாதிரியார் மரக் கூண்டுக்கு வெளியே நின்று எக்கிப் பார்த்தார். தூசு உறிஞ்சும் யந்திரத்தை அவ்வப்போது காலால் இயக்கிக் கொண்டு நடக்கிற நடுவயதுப் பெண் தவிர உள்ளே யாருமே இல்லை. பெரிய பூப்போட்ட உடுப்பும் மேலே நீலக் கோட்டும் அணிந்த லத்தீன் அமெரிக்கப் பெண்மணி அவள். உலகமே கண்ணாடிக் கூண்டுக்கு அந்தப் பக்கம் திரண்டு நின்று அழைத்தாலும் அவள் திரும்பி என்ன என்று பார்க்க உத்தேசித்திருந்ததாகத் தெரியவில்லை. அந்த…




Read more »

ரொமன் பொலன்ஸ்கி பற்றியும் மற்றவையும் – எழுத்துக்காரன் குறிப்புகள் – ஏப்ரல் 2015

By |

ரொமன் பொலன்ஸ்கி பற்றியும் மற்றவையும் – எழுத்துக்காரன் குறிப்புகள் – ஏப்ரல் 2015

வகுப்பு எடுப்பதற்காக, எத்தனையோ வருடம் கழித்து மறுபடி ரொமன் பொலன்ஸ்கியின் (Repulsion) ரெபல்ஷன் திரைப் படம் பார்த்தேன் ஆழ்மனதில் பதிந்த வெறுப்பும், தனிமையும் மனதைக் குறக்களி காட்டி நிஜத்துக்கும் பிரமைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க விடாமல் குழப்பி அந்தகாரத்தில் ஆழ்த்தும் கதை. கேதரின் டெனேயூ Catherine Deneuve அருமையாக சித்தப் பிரமை கண்ட கதாநாயகியாக நடித்திருப்பதைக் கண்டு இன்னொரு புகழ் பெற்ற பிரஞ்சு இயக்குனர் லூயி புனுவல் Luis Bunuel கேதரினுக்கு இதுபோல் மாறுதலான பெண் பாத்திரம் கொடுத்து,…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 29 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 29            இரா.முருகன்

ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டுக் கடையை அடைச்சுப் பூட்டிட்டுப் போனா, கால்டர்டேல் ஊரில் பல பேர் பட்டினியால் செத்துப் போயிடுவாங்க. அப்படி இல்லேன்னாலும் தெரிசா கடையில் விற்கும் வறுத்த மீன் எப்படி இருக்கும், கூடவே வறுவல் எவ்வளவு வரும், கொஞ்சம் போல புளிப்பும் கொஞ்சம் போல காரமுமாக அது எப்படி மீனோட வாடையோடு சமாதானமாகச் சேரும்னு எல்லாம் மறந்து விடலாம். இந்தப் படிக்கு வேறு மீனும் வறுவலும் விக்கற பெரிய கடை கால்டர்டேலில் இதுவரை இல்லை. நாம் கடையை…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 28 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 28         இரா.முருகன்

பாகம்பிரியாளூர் பஞ்சாபகேச சிரௌதிகள் அவருக்குப் பழக்கமான தினசரி கடமையில் லயித்திருந்தார். வால்மீகி ராமாயணத்தில் இருந்து தினசரி விடிந்ததும் ஒரு அரை, காலே அரைக்கால் ஸ்லோகம் எடுத்து வைத்துக் கொண்டு அதை விஸ்தாரமாக ஒரு மணி நேரம் சொல்வார் அவர். சில நாள் ஒரு ஒற்றை வரி மட்டும் இப்படி எடுக்கப்பட்டு வால்மீகி சொன்னது, பவபூதி சொன்னது, தெலுங்கில் ஒருத்தர், மலையாளத்தில் இன்னொருத்தர், உருது ராமாயணம், எல்லாத்துக்கும் மேல் பஞ்சாபகேசனின் சொந்த சிந்தனையில் வந்தது என்று ஒரு மணி…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 27 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 27      இரா.முருகன்

நாலு பக்க ஜன்னலும் மட்ட மல்லாக்கத் திறந்து வீடு முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருக்க, கற்பகம் சுருண்டு படுத்திருந்தாள். நீலகண்டன் போய்ச் சேர்ந்து ஒரு மாதமாகி விட்டது. போன மாதம் இந்தத் தேதிக்கு, இந்த நேரத்துக்குத் தான் அவனை மூங்கில் படுக்கையில் தூக்கிப் போய் எரித்து விட்டு வந்தார்கள். நீலகண்டனைக் கவனித்துக் கொள்ளும் மேல் நர்ஸ் லிங்கம் ஊருக்குப் போக லீவு எடுத்திருந்த நாள் அது. நடு ராத்திரிக்கு அப்புறம் எப்போதோ கூடத்துக்கும் பாத்ரூமுக்கும் நடுவில் பாலம்…




Read more »