Author Archive

புது bio-fiction novel தியூப்ளே வீதி – அத்தியாயம் 15 இரா.முருகன்

By |

புது bio-fiction novel  தியூப்ளே வீதி  – அத்தியாயம் 15                 இரா.முருகன்

ஒரு வெப்பமான நடுப்பகலின் தொடர்ச்சியாக மழைக் காலம் ஆரம்பித்தது. தெர்மோடைனமிக்ஸ் வகுப்பில் எண்ட்ரபி என்ற அதி உன்னதமான சமாச்சாரத்தை விவாதித்துக் கொண்டிருந்தபோது, மூடி வைத்த ஜன்னல்கள் காற்றில் திறக்க, சாரலாக வகுப்புக்குள் சீறி அடித்தது இந்த ஆண்டின் முதல் மழை. அது எல்லோரையும் குழந்தையாக்கி கூகூவென்று கூவ வைத்தது. முதல் கூவல், புரபசர் நெடுமுடி வெர்கீஸ் சாண்டி சார் இட்டது. வலுத்துப் பெய்த மழையில் தெர்மோடைனமிக்ஸ் விடைபெற்றுப் போய்விட்டது. ரொம்பவே அதிசயமான கூட்டு மௌனம். நின்று பெய்யும்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 47 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்         அத்தியாயம் 47       இரா.முருகன்

கடவுள். தாய்த் தெய்வம். உறங்கிக் காலையில் விழித்ததும் தேநீர் கொடுக்க ஒரு படையே நிற்கிறது. ராணுவம். ஆயிரம் ரெண்டாயிரம் ஆப்பிரிக்க வீரர்கள். மாறி மாறி வருகிறார்கள். நந்தினிக்கு அவர்கள் எல்லோரும் பகலும் இரவும் காவல். நந்தினி அவர்களுக்கு நிரந்தரக் காவல். ஒரு வருடமாக இப்படித் தான் நடக்கிறது. வீட்டு வாசலில் ராணுவ வண்டி வந்து நின்ற ஒரு பகல் பொழுதில் நந்தினி கடவுளானாள். சரியாகச் சொன்னால், கடவுளுக்கு மூத்த சகோதரி. அவள் கிடைத்த நிம்மதியில் கடவுளை சாவகாசமாக…




Read more »

புது bio-fiction novel : தியூப்ளே வீதி – அத்தியாயம் 13 இரா.முருகன்

By |

புது bio-fiction novel :  தியூப்ளே வீதி    – அத்தியாயம் 13         இரா.முருகன்

ரத்னா தியேட்டரில் மேட்னி ஷோ. உத்தரவின்றி உள்ளே வா என்று வேண்டி விரும்பிக் கூப்பிட்டதால் என்ன விஷயம் என்று டிக்கெட் எடுத்துப் போய்ப் போய்ப் பார்த்து விட்டு சக்கரம் போகிற போக்கில் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தேன். ரூ ல போர் என்ற கதவுத் தெரு நான் வந்தது. தெற்கு வசத்தில் அதன் வலது கைப்பக்கம் முண்டாசு தெரு என்று சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் சகோதரர்கள் சொல்லும் மாண்டார்சியர் தெரு. இதுவரை இந்த ஊரில் புகுந்து புறப்பட்டுப்…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 46 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்   அத்தியாயம் 46          இரா.முருகன்

ஆவக்கா ஊறுகா இருந்தாப் போடேன் பாட்டி. மொட்டை ரசஞ்சாதமா எப்படி சாப்பிடறது? திலீப் தட்டில் பரப்பி வைத்த தணுத்த சாதமும் மேலே மிதக்கும் ரச வண்டலுமாகத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி, வாசலைப் பார்த்துச் சத்தம் போட்டான். வச்சுண்டா வஞ்சகம் பண்றேன், ஏண்டா? ஊர்லே இருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தது முழுக்க நீதான் தின்னு தீர்த்தே. ஜனனிக்கு ஒரு எவர்சில்வர் டப்பாலே போட்டுக் கொண்டு போய்க் கொடுடான்னு தாவாக்கட்டையைப் பிடிச்சுக் கெஞ்சினேன். போடி கெழவின்னு குண்டியைத் தட்டிண்டு…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 45 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்  அத்தியாயம் 45        இரா.முருகன்

– அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம். திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும். ஹை டைட் ஹை டைட் என்று ஒரு காவலர் அறிவித்துக் கொண்டே போக, அகல்யாவும் திலீபும் கடல் பாதையில் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஓட வேண்டும். எழுந்த அலையில் ரெண்டு பேரும்…




Read more »

புது bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 12 இரா.முருகன்

By |

புது bio-fiction   தியூப்ளே வீதி – அத்தியாயம் 12  இரா.முருகன்

அவசரமாக எச்சில் முழுங்கினேன். கண் இதுக்கு மேலே விரிந்தால் உள்ளே இருந்து கண்விழிப் பாப்பா, நரம்பு, பெருமூளை, சிறு மூளை எல்லாம் வெளியே வந்து விழுந்து விடும். ’என்ன தம்பி, காசு எடுத்தாறலியா? பரவாயில்லே பெறகு கொடு’ நான் நீட்டிய ஜூனியர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைத் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் பெருந்தன்மையாக என்னிடமே தருகிறார் பாரதி வீதி கடைக்காரர். பத்திரிகை அட்டை முழுக்க ஈரம் ஜொலிக்கச் சாய்ந்து, ஒய்யாரமாக ரெண்டு துண்டு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தபடி ஒரு…




Read more »