Author Archive

New Short Story : கூத்தாட்டு குளம் இரா.முருகன்

By |

New Short Story : கூத்தாட்டு குளம்       இரா.முருகன்

கூத்தாட்டு குளம் இரா.முருகன் கரையில் சைக்கிளை ஏற்றிக் கொண்டிருந்த போது அவரைப் பார்த்தேன். நாலரை அடிதான் உயரம். நெற்குதிர் போல உருண்ட உடம்பு. காதில் கடுக்கன் போட்டவர். மடித்துக் கட்டிய கதர் வேட்டியும், கையில் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவுமாக குளப் படியில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். ரேடியோவில் ஆய் புவான் என்று கொழும்பு நேரம் சொல்லி சிங்களப் பாட்டு உரக்கக் கேட்டது. இலங்கை வானொலியில் தமிழ்ச் சேவை முடிந்து சிங்களம் தொடரும் முற்பகல் நேரம். அவரை கேலரியில்…




Read more »

New Short Story : வைக்கோல் கிராமம் இரா.முருகன்

By |

New Short Story : வைக்கோல் கிராமம்      இரா.முருகன்

( விருட்சம் – 100 சிறப்பிதழில் பிரசுரமானது – அக்டோபர் 2016) இரண்டாவது முறையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். கனவுகளில் இந்த ஊரைக் கடந்து போவது நிறைய நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் ஊர்ப்பொதுவுக்கு மேலே பறந்து, அவசரமாகக் கடந்து, கடலும் நதியும் சந்திக்கும் முகத்துவாரத்துக்குப் போய் விடுவேன். போன வாரம் கூட நடுநிசிக்கு ஆளில்லாத இந்த ஊரைக் கனவில் கடந்தபோது, புதிதாக முளைத்த வைக்கோல் பொம்மைகளைப் பார்த்தேன். அவை எல்லா நிறத்திலும் பளபளத்து நிற்பவை. எத்தனையோ வருடம்…




Read more »

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 46 இரா.முருகன்

By |

New novel : வாழ்ந்து போதீரே                           அத்தியாயம்  46       இரா.முருகன்

காலை வெய்யில் ஏற ஆரம்பித்தது. தியாகராஜ சாஸ்திரிகள் இன்னும் வந்து சேரவில்லை. இரண்டு இங்கிலீஷ் பத்திரிகைகளை ஆதி முதல் அந்தம் வரை எந்த சுவாரசியமும் இல்லாமல் தெரிசா படித்து முடித்திருந்தாள். இனியும் ஒரு முறை அவற்றைப் படிப்பதை விட தெருவில் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு, அபூர்வமாக விடுதி வளாகத்துக்குள் வரும் பழைய கார்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம். எங்கே போயிருப்பார்? ராத்திரி முழுக்கக் கண் விழித்திருந்ததாகச் சொன்னாரே, உடம்புக்கு ஏதாவது ஏடாகூடமாக ஆகியிருக்குமா? அவர் வருகிற சூசனையே…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 45 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே      அத்தியாயம் 45           இரா.முருகன்

ஆலப்புழையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி மதுரை சந்திப்புக்கு ரெண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது கொச்சு தெரிசாவுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாகப் போனது. சரியான நேரத்துக்கு அது வந்திருந்தால் நடுராத்திரி கழிந்து அதிகாலையாக இன்னும் நிறைய நேரம் பாக்கி இருக்கும் பின்னிரவு ரெண்டு மணிக்கு கொச்சு தெரிசா இங்கே ரயிலை விட்டிறங்கி இருப்பாள். மதுரை இருபத்து நாலு மணி நேரமும் கண் விழித்துப் பரபரப்பும் கலகலப்புமாக எப்போதுமிருக்கும் அபூர்வ நகரம் என்பதால் அவளுக்கு…




Read more »

New column for The Wagon Magazine (Oct 2016) Falling between the stools to occupy the chair

By |

New column for The Wagon Magazine (Oct 2016) Falling between the stools to occupy the chair

There indeed is something in the air. It is an ominous beginning to something else that I can always sense fairly accurate, even if it occurs a few kilometres away from where my current coordinates are. When it happens, my neurotic radar never fails me and beeps binary signals diligently to my cerebrum, putting me…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 44 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே       அத்தியாயம் 44          இரா.முருகன்

வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பத்திநான்கு இரா.முருகன் வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து : குளிரும் மூடுபனியும் அடர்ந்து கனமாகப் படிந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாத முன்னிரவு நேரத்தில் குஞ்ஞம்மிணி வீராவாலியைச் சந்தித்தாள். காலம் நிலைத்த இடம். பழைய தில்லியின் சாலையொன்று சென்று தேய்ந்து மடங்கிக் குளிருக்கு இதமாக உள்வளைந்து சுருண்ட முடுக்குச் சந்து அது. இந்தப் பழைய பட்டணத்தில் எல்லோரும் ராச்சாப்பாட்டுக்காக உட்காரும் நேரம். கால தேச வர்த்தமானங்களுக்கு வெளியே ஜீவிக்கிறவள் என்றாலும் குஞ்ஞம்மிணிக்குப் புரிகிறது. முன்னெல்லாம்…




Read more »