Author Archive

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 51 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே   அத்தியாயம் 51           இரா.முருகன்

பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். சகோதரி. ராதாகிருஷ்ண திராவிடப் பண்டிதர் தெரிசாவிடம் சொன்னார். அப்படி என்றால்? தெரிசா கேட்டாள். செய்த தவறுக்கு மாற்றாகச் செய்கிற செயல். ஏற்கனவே நிகழ்ந்ததற்காக அபராதம் செலுத்துகிறது போல் இருக்கலாம். அல்லது அதன் விளைவுகள் இனியும் அண்டாமல் அகற்றி நிறுத்துகிற சடங்குகளாக இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் உடல், மனம் என்று சகலமானதையும் தூய்மைப் படுத்திக் கொள்ளும் நடவடிக்கை தான் பிராயச்சித்தம். பிராயச்சித்தம் செய்வதற்கு முக்கியமானது, ஏற்கனவே தவறு செய்திருப்பது இல்லையா? தெரிசா அடுத்துக் கேட்டாள்….




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 50 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே     அத்தியாயம் 50     இரா.முருகன்

முசாபர் தெரிசாவுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து : (sic erat scriptum- எழுதப்பட்ட படி) என் அன்பே, நேற்று மதியம், வீட்டுச் சாவியையும் வீட்டு உரிமைப் பத்திரத்தையும் கொலாசியம் மதுக்கடை பக்கத்துலே கம்ரான் ரெஸ்டாரண்ட் வச்சிருக்கற முஷ்டக் முஹம்மதுவுக்குக் கைமாற்றினேன். ஒரே அழுகை. எனக்குத் தான். மனசுலே ஏதோ அணை உடஞ்ச மாதிரி உடம்பெல்லாம் சிலிர்க்க, அடி வயத்துலே வலியாகக் கிளம்பி வந்தது அது. கண் இருட்டிப் போனது. கை நடுக்கம் வேறே. அந்த அழுகையோடு நான்…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 49 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே      அத்தியாயம் 49   இரா.முருகன்

இங்கிலீஷ்காரி. அகல்யாவுக்குத் தெரியும். இந்தப் பெண் அங்கே, லண்டனோ, வேறே பட்டணமோ, இங்கிலாந்தில் இருந்து வந்து இறங்கி இருக்கிறாள். கறுப்பு தான். சரி, மாநிறம். அகல்யா சிவப்பு. சரி, சரி, கூடுதல் மாநிறம். அகல்யாவுக்கு, கற்பகம் பாட்டி சொல்வது போல, கொடி போல் உடல்வாகு. பிள்ளை பெற்றால் ஊதிப் போகலாம். இந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும் என்று தோன்றவில்லை. உருண்ட தோளோடு கன்னம் வழுவழுத்து, மார்பு திரண்டு, பூசினால் போல் வடிவாக வந்து நிற்கிறாள். அகல்யாவை விட…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 48 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே    அத்தியாயம் 48    இரா.முருகன்

நாற்பத்தேழு அத்தியாயம் எழுதி முடித்து விட்டேன். வைத்தாஸ் சொன்னான். பதில் இல்லை. தொலைபேசியைக் காதோடு பொருத்திக் கொண்டு இன்னொரு தடவை கொஞ்சம் உரக்கவே சொன்னான் – நாற்பத்தேழு அத்தியாயம் என் நாவலை எழுதி விட்டேன். தொலைபேசியின் அந்தப் பக்கத்தில் இருந்து மெல்லிய ஆனாலும் கண்டிப்பான குரல் கேட்டது – வாழ்த்துகள். எங்கள் நாட்டின் இணையற்ற அரசியல் மற்றும் கலாசாரத் தூதுவரின் இலக்கியச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுவது குறித்து அமைச்சரகத்தின் தலைமை அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி. இந்தியப்…




Read more »

New Short Story: குவியம் இரா.முருகன்

By |

New Short Story:   குவியம்                 இரா.முருகன்

குழலி நடக்க ஆரம்பிக்கிறாள். விசில் சத்தம் தான் கணக்கு. அது கேட்டதும் பிரகாசமான இந்த வெளியில் ஒரு அன்னிய புருஷனோடு கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். ஐந்து அடி நடந்ததும் வலது புறம் திரும்ப வேண்டும். சந்தோஷமாக இருப்பதை அறிவிக்கப் புன்னகை பூக்க வேண்டும். அப்படியே அவன் கையை மெல்ல உயர்த்தி, பின் தாழ்த்தி, இறுகப் பற்றியபடியே தொடர்ந்து நடக்க வேண்டும். அவன் பெயர் தான் என்ன? நீளமாக இன்னொரு முறை விசில் ஊதுகிறது. நிற்க…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 47 இரா.முருகன்

By |

New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 47     இரா.முருகன்

நேரம் கெட்ட நேரத்தில் ஓவென்று கூப்பாடு போட்டு ராஜாவை எழுப்பி விட்டார்கள். யாரென்று கேட்டால்? என்னத்தைச் சொல்லி எழவைக் கூட்ட? ஊர்ப்பட்ட விளங்காப் பயலுகள் எல்லோரும் சேர்த்து அடிச்ச கூத்து அதெல்லாம். ரெக்கார்டு போடறாக என்றான் சமையல்காரப் பழநியப்பன். வக்காளி எனக்குத் தெரியாதாடா என்று அவனிடம் எகிறினார் மகாராஜா. பின்னே? இருக்கும்போது தான் கருவாட்டுக் குழம்பை உப்புப் போடாமல் வைத்து இறக்கி, மோர் சோற்றில் ஒரு குத்து அஸ்கா சர்க்கரையைக் கலந்து ராஜாவுக்கு பேதி வரவழைச்ச கெட்ட…




Read more »