Author Archive

எமர்ஜென்சி நேர பத்திரிகைத் தணிக்கையில் – வீடு தோறும் மறம் வளர்ப்போம்

By |

Excerpts from my novel 1975 என் பார்வையைப் புரிந்து கொண்டவர் போல் குருநாதன் சொன்னார் – “ஊர்லே இருந்து, எங்க வட்டாரத்திலே பெரும்பாலும். பசங்க எல்லோருக்கும் பட்டணத்துலே சாதிக்கறது ஒரு பெரிய கனவு. பலரும் சினிமா பாட்டு எழுத, கதை வசனம் எழுத இப்படி சான்ஸ் தேடி வந்துடறாங்க. நடிக்கறேன்னு கூட சில பசங்க வந்து சேர்றது உண்டு. என் விலாசத்தை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு நேரே இங்கே தான் வருவானுங்க. நான் இப்படி என்னைத் தேடி…




Read more »

எமர்ஜென்சியும் மிதுக்க வத்தலும் – நாவல் 1975 – ஒரு சிறு பகுதி

By |

An excerpt from my novel 1975 மெல்லச் சேர்ந்த எங்கள் எட்டு நபர் குழு வெற்றிகரமாக திருவல்லிக்கேணி பஸ் பயணம். என்னமோ தெரியவில்லை, இன்றைக்கு நின்று நின்று வராமல் முக்கால் மணி நேரம் மட்டும் பயணம் செய்து திருவல்லிக்கேணி வந்து விட்டோம். ”ஏழு மணிதான் ஆவுது. எட்டு மணிக்கு தான் ராவ்ஜி, சைடோஜி, தீனாஜின்னு எல்லா ஜி மெஸ்ஸும் களை கட்டும். தீனாஜி மெஸ்ஸுக்கு இன்னிக்கு வரேன்னு சொல்லி விட்டிருக்கேன்”. விஸ்வநாதன் தோளில் பெரிய துணிப்பையை…




Read more »

1975 நாவலில் இருந்து – மேன்ஷன் சுதந்திரங்கள்

By |

1975 நாவலில் இருந்து – மேன்ஷன் சுதந்திரங்கள்

1975 நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி தி நகர் பஸ் ஸ்டாண்டில் பதின்மூன்றாம் நெம்பர் பஸ்ஸை பிடிப்பதைவிட கஷ்டமான வேலை கிடையாது. திருவல்லிக்கேணி போகும் பஸ் அது. காலை நேரத்தில் எல்லாக் கூட்டமும் அண்ணாசாலைக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்போதும் திருவல்லிக்கேணி பஸ் நிரம்பி வழியும். மதியம் மீதி ரூட் பஸ் எல்லாம் சும்மா போகும். என்ன காரணத்துக்காகவோ மாம்பலம் மனுஷர்கள் வேகாத வெயில் என்றாலும் திருவல்லிக்கேணி போவார்கள். சாயந்திரம் பீச் போகிற கூட்டம். அதற்கு நாள்,…




Read more »

1975 – நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

By |

Excerpt from my novel 1975 அரசியல் சட்ட திருத்தம் 38, 39,40,41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் மக்களாட்சியின் சாதனை என்று வானொலி சொல்ல, கவிஞர்கள் சளைக்காமல் வாழ்த்துக் கவிதை எழுதித்தர, சேர்ந்த இசை என்று ஆகாசவாணியில் நடுப்பகலில் கூட்டமாகப் பாடப்பட்டது. எதிர்க்கட்சிக்காரர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதானதையோ, தலைமறைவானதையோ மறந்தும் வானொலி சொல்லவில்லை. பத்திரிகைகளில் அந்த சாதாரண செய்தி ஏதும் வராமல்…




Read more »

நாவல் 1975 – வசந்தா ராகத்தில் டூயட் பாடி ஒரு 20 அம்சக் காதல்

By |

Excerpts from my novel 1975 கேளு நாயரும் அவர் மகள் பாருகுட்டியும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில் என்னைத் தேடி வீட்டுக்கு வந்திருக்காவிட்டால் நான் இந்த அத்தியாயத்தை எழுதியிருக்கப் போவதில்லை. கேளு நாயரைப் பற்றி அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்தானே? பாருகுட்டியைக் கவனிக்கலாம். பாருக்குட்டி இல்லை. பாருகுட்டி. பெயருக்கும் குட்டிக்கும் நடுவே மெய்யெழுத்தெல்லாம் அண்டாது. மலையாளப் பெண் பெயர்களுக்கு ஒட்டாக ஒரு குட்டியைச் சேர்த்து பாருகுட்டி, அம்முகுட்டி, ஜானுகுட்டி, மோலிகுட்டி. இன்னும் செல்லமாக மாலூட்டி என்ற மாலுகுட்டி.. இப்படி…




Read more »

Why are you not writing about technology nowadays?

By |

My response – Technology related writing requires staying up to date tech savvy always… It is not that difficult to be. Also not a cakewalk either. I was writing once in a month in The Hindu Tamil edition on technology. I found the readers’ response was on the lowest ebb when I wrote about Big…




Read more »