Author Archive

பாலத்தில் அணில்கள்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -14 இரா.முருகன் புதிய திரைப்படத்துக்குக் கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். இது செய்தி. இருபது வருடத்துக்கு முந்தி வெளிவந்த பழைய தொடர்கதையை பைண்ட் செய்து வைத்த புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைத் திருப்பும்போது படத்தோடு படிக்கக் கிடைத்தால் பழைய நினைப்பில் அசைபோட சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால் உச்சந்தலையில் முடி குத்திட்டு நிற்கத் திகிலோடு படிக்க வேண்டிப் போனது. காரணம் முந்தாநாள் வந்த பத்திரிகைச் செய்தி இது. கவியரசர் ஆவியாக…




Read more »

ஹரிவராசனம்

By |

  ஹரிவராசனம் எப்போது துவங்கியது? தேசாபிமானி இதழில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு இது) நான் ரசித்த கட்டுரை – சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று மணிக்கு நடை அடைப்பது, கானகந்தர்வன் ஏசுதாஸ் பாடிய ஹரிவராஸனம் பாடலோடுதான். பகவான் அய்யப்பனுக்கும், அய்யப்ப பக்தர்களுக்குமான தாலாட்டு போன்றது இப்பாடலை இசைப்பது சபரிமலையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பழக்கமாக உள்ளது. ஹரிவராஸனம் எப்படி சபரிமலைக்கு வந்து சேர்ந்தது? ஐம்பது வருடம் முன்னால் சபரிமலை சந்நிதானத்தில் மேல்சாந்தியாக இருந்த…




Read more »

நம்பூத்ரி மலையாளம்

By |

  அதிக வேகத்தோடு பேசப்படுவதால், முதல் சொல்லின் கடைசிச் சீரும், அடுத்த சொல்லின் முதல் சீரும் குழம்பி ஒலிப்பது இந்தப் பேச்சில் முக்கியமானது. அது தவிர சில பிரயோகங்கள் – அஸ்ஸலாயி, கேமனாயி (நல்லாயிருக்கு), ஸ்ஸி (கொஞ்சம்), ‘ன்னிட்டு’ (என்றால்) – இந்தப் பேச்சுமொழிக்குத் தனித்துவம் கொடுப்பவை. ஒரு நம்பூதிரி பலிதம் (பொழுதுபோக்கு கதை) அந்தப் பேச்சு வழக்கிலேயே.




Read more »

எஸ்.பொ நோ போ

By |

  முன்னுரைகளின் முகவுரை இரா.முருகன் எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம்…




Read more »

யாசுநாரி காவபாத்தா

By |

  யாசுநாரி காவாபாத்தா எலும்பும் தோலுமாக ஓர் அமெரிக்க ராணுவ வீரன். சிறைப் பிடித்து வைக்கப்பட்டவன். அவனை வளைத்துப் பிடித்த எதிரிகள் குரூரமானவர்கள். ஒரு நாளைக்குப் பதினாலு மணி நேரத்துக்கு மேல் அடிமை போல் இடுப்பொடிய வேலை செய்ய வைக்கிறார்கள். அடர்ந்த வனாந்தரங்கள், மலைச்சரிவுகள் வழியே ரயில் பாதை அமைக்கிற வேலை. உழைப்புக்கு ஊதியம் கிடையாது என்பதோடு அப்படி மாடு மாதிரி உழைக்க உடம்பில் சக்தி இருக்கச் சாப்பாடும் சரியாகப் போடுவதில்லை. பசியால் சோர்ந்து போய் வேலை…




Read more »

எம் ‘ஐயர்’

By |

  எம் ‘ஐயர்’ சொற்கள் கற்பிதம் என்றானபோது அவற்றின் பொருளும் அவ்வாறே. படைப்பாளி என்ற பதத்துக்கு இன்று வழக்கிலிருக்கும் `இலக்கிய, கலைப் படைப்பை உருவாக்குகிறவர்’ என்ற பொருள் சற்றே நீட்சிப்பட, `ஒரு வழங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நுண்ணிய ரசனையின் பாற்பட்டுத் தொடங்கி, அந்த அடிப்படையையும் கடந்து விரியும் பரப்பில் நேர்த்தியான வாசிப்பு, காட்சி, கேள்வி அனுபவத்தை ஓர் இனக்குழு பெறவும், அதை முன்னெடுத்துச் செல்லவும், செழுமையுறப் பேணவும், அதன் வழி யே பெற்ற ஊக்கத்தை…




Read more »