Author Archive

ஈ மசி

By |

  கல்கி ‘டிஜிட்டல் காண்டீன்’ பத்தி சின்ன வயசில் பெரிய வீட்டில் இருந்துவிட்டுப் பெரிய வயசில் சின்ன வீட்டில் குடி போவது போல் துயரம் எதுவுமில்லை. அட, பல மாடிக் குடியிருப்பு அபார்ட்மெண்டைச் சொல்றேன் சார். ரெண்டு பெட்ரூம், எலிப் பொறி மாதிரி சமையல் அறை, ஹாலில் சோபா, நாலு நாற்காலி, டைனிங் டேபிள் என்று நாலாவது மாடியில் எண்ணூறு சதுர அடி ஃப்ளாட்டின் வசிக்கும் பலருக்கும் புத்தகம் படிக்க ஆசையிருந்தாலும் வாங்கிச் சேர்த்து வைக்க இடம்…




Read more »

வெர்ச்சுவல் ரியலிட்டி – இன்று

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி கல்கியில் பொய்-மெய் (வெர்ச்சுவல் ரியலிட்டி) பற்றி 1995-லேயே எழுதியிருக்கிறேன். (பார்க்க – என் புத்தகம் ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ – ஸ்நேகா பதிப்பக வெளியீடு). பதிமூன்று வருடம் கழித்து கல்கியில் திரும்பப் பத்தி எழுதும்போது வெர்ச்சுவல் ரியலிட்டியோ, பத்தி எழுதி வரும் சன்மானத் தொகையோ அன்று கண்ட மேனிக்கு அப்படியே இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை!) *************************************** கண்ணபிரானும் நாரதரும் பூமியில் நடந்து போகிறார்கள். தாகம் என்று…




Read more »

Letter’s வந்த கடிதங்களில் இருந்து

By |

Hello ERM I am Mani from Mumbai, running software company…….. Your project management article could have been little more crisp. But anyway it is good attempt. You can assume the readers have some sort of official eco system knowledge and you can aim for them I guess, you have forced yourself to write for all…




Read more »

எட்டு பெட்டிகள்

By |

  குங்குமம் பத்தி – ‘அற்ப விஷயங்கள்’ வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் சேகரிப்பது இந்தப் பிரபலங்களின் ‘காலமானார்’ செய்திகள். மேல் நாட்டுப் பத்திரிகைகளில் இரங்கல் குறிப்பு எழுதுவதற்கு என்றே தனியாக சிறப்புச் செய்தியாளர்கள் உண்டு. ஆபிசுவரி எடிட்டர் வேலைக்கு…




Read more »

குடம்

By |

  புதிய பார்வை சிறுகதை (அண்மையில் வெளியானது) குடம் இரா.முருகன் ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன் சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ. எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு…




Read more »

விஸ்வரூபம் – புது நாவல்

By |

  விஸ்வரூபம் ஒரு தொடர். – அரசூர் வம்சம் நாவலைத் தொடர்ந்து வருகிற மற்றொரு நாவல். இதுவும் கடந்து இன்னொன்றும் வரும். பகிர்ந்து கொள்ள ஏராளமாக இருக்கிறது. அரசூர் வம்சம் காட்டும் காலச் சூழல் 1850-1890 வரை என்று ஒரு சவுகரியத்துக்காக (என் சவுகரியம், உங்கள் சவுகரியம்) வகுத்துக் கொண்டால், விஸ்வரூபம் இருபதாம் நூற்றாண்டு பிறக்க ஒரு வருடம் முன்னால் தொடங்குகிறது. தமிழ்நாடு, கம்யூனிசத்தின் விதைகள் நிவர்த்தன சமரத்தில் விதைக்கப்பட்ட மலையாள பூமியான குட்டநாடு இவற்றோடு விக்டோரியா…




Read more »