Archive For ஜூன் 20, 2017

என்ன பெயர் வைக்கலாம்?

By |

A snippet from the Malayalam novel I’m currently translating – Lanthan Bathery பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார் : “குழந்தைக்கு வைக்கப் போகிற பேர் என்னன்னு தீர்மானம் செஞ்சிருக்கீங்களா?” “ஜெஸிகா”, என்றாள் விக்கி பெரியம்மா. “அந்தப் பெயர்லே ஒரு புனிதர் உண்டா?”, கோவில் பணிக்கார ஆண்டனி கேட்டான். எட்வின்சேட்டனும் விக்கி பெரியம்மாவும் என் அப்பனைப் பார்த்தார்கள். ஜெஸிகா என்ற பெயருக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. என் அம்மாவின் குழந்தைப் பருவத்தின்போது, அவளுடைய அம்மாவான…




Read more »

மெதுவாக கட்சிப் பத்திரிகையை நுழைக்கணும்

By |

மலாக்கா ஹௌஸின் முதல் மாடியில் இருக்கும் முதலாவது அறையைத் திறந்துகொண்டு ராகவன் சொன்னார்: “இது தான் ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆபீஸ். தோழர் இங்கே படுத்து உறங்கலாம்”. சொல்லியபடி, அவர் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றினார். “ஏன் இங்கே முழுக்க மர பெஞ்சு போட்டு வச்சிருக்கு?” என்று ஷெனாய் கேட்டார். “சமயத்துலே மூணு நாலு பேருக்குப் புகலிடம் கொடுக்க வேண்டிப் போகும். அதனாலே தான்” ”இங்கே உள்ளூர்க்காரங்க யாரும் வரமாட்டாங்களா?” “வர்ற வழக்கமில்லே. கட்சியை தடை செஞ்சதாலே…




Read more »

கை நடுக்கம் போனால் கலையும் போகும்

By |

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும், திரு.என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி மசாலாப்பொடியை எட்வின்சேட்டன் நகமுனையால் அளந்து, வெந்த இறைச்சி மேல் தூவினார். அதன் மேல் மூன்றில் ஒருபாகம் சோற்றைப் பரப்பினார். தண்ணீர் விட்டுக் கரைத்திருந்த மஞ்சள்பொடியை அவர் சோற்றின் மேல் தெளித்தார். அதன் மேல் எட்வின்சேட்டன் இன்னொரு மெல்லிய அடுக்கு சோற்றைப் பரப்பினார். அதன்மேல், வறுத்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும். இன்னொரு நகக்கண் அளவு மசாலாப்பொடி. மேலே, இன்னொரு…




Read more »

பிரியாணியின் கதை

By |

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி எட்வின்சேட்டன் சற்றுநேரம் ஏதும் பேசாமலிருந்தார். பிரியாணி அவர் மனதை விட்டு வெளியே போகவில்லை. மூன்று விரல்கடை ரம் கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டு அப்பன் கேட்டார் : “எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?” “எங்க அப்பன்கிட்டே தான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை…




Read more »

சாம்பிள் சோப் பரிசளித்த சக்கரவர்த்திகள்

By |

A snippet from the Malayalam novel “Lanthan Batheriyile Luthiniyakal” of Shri M.S.Madhavan I’m currently translatig வேலிக்கு அப்புறம் அவர்கள் மூவரையும் பார்த்து வலிய மத்தேவுஸ் ஆசாரி ஓடி வந்தார். “வரணும், வரணும் சந்தியாகு மேஸ்திரி. பிராஞ்சி, மிக்கூ நீங்களும் வாங்க. உள்ளே வாங்க எல்லோரும்”. ”வலிய மத்தேவுஸ் ஆசாரியாரே, நீங்க நினைக்கற ஆளுங்க இல்லே நாங்க. நான் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி காரல்மான். இந்த இளையவர் ரோமாபுரியிலே டயோக்ளீஷன் சக்கரவர்த்தி”. சந்தியாகு…




Read more »

இது என்ன வாராவாரம் லைசென்ஸ் புதுப்பிக்கிற இடமா?

By |

A snippet from the Malayalam novel I’m currently translating கொட்டாரம் படகுத்துறையை அடைந்தபோது தூண்டில்காரர்களின் வரிசை முடிந்திருந்தது. பந்தம் கொளுத்திப் பிடித்துக்கொண்டு ஒருத்தன் தூரத்தில் வருவதை அவர்கள் பார்த்தார்கள். “நம்ம முதல் குடிமகன்”, என்றான் சந்தியாகு “அது பென்ஹர்சேட்டன். ரொம்ப கோபக்காரன்”, பிரான்சிஸ் சொன்னான். பென்ஹரைத் தடுத்து நிறுத்தி சந்தியாகு சொன்னான்: “நான் காரல்மான் ச்க்கரவர்த்தி. இது துருக்கி சுல்தான் அல்பிராந்த்”. “மேஸ்திரி, குறுக்கே நின்னு வழி மரிக்காம, விஷயம் என்னன்னு சொல்லு”, பென்ஹர்…




Read more »